districts

img

குன்றாண்டார்கோவில் சிபிஎம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் தோழர் ஜி.முனியய்யா காலமானார்

புதுக்கோட்டை, ஏப்.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றிய முன்னாள் செயலாளர் தோழர் ஜி. முனியய்யா (60) உடல் நலக் குறைவு காரணமாக திங்கள் கிழமை காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோ வில் ஒன்றியச் செயலாளராக கடந்த 2012 முதல் 2018 வரை பணியாற்றியவர் தோழர் ஜி. முனியய்யா. கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழுவிலும், விவசாய இயக்கத்திலும் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர். சமீப  காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த முனியய்யா  சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 60. குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கிள்ளனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரு மான எம்.சின்னதுரை, மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், மூத்த தோழர் கள் எம்.ஜியாவுதீன், கே.தங்கவேல், எஸ்.பீமராஜ், மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர்,  கே.சண்முகம், சி.அன்புமணவா ளன், ஒன்றியச் செயலாளர் எஸ். கலைச்செல்வன், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் கே.முகமதலி ஜின்னா, எம்.ஆர்.சுப்பையா, கி. ஜெயபாலன் உள்ளிட்ட பலர் அஞ்சலி  செலுத்தினர். தோழர் முனியய்யாவிற்கு சுமதி என்ற மனைவியும் இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர்.