திருச்சிராப்பள்ளி, பிப்.12- பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு, கடந்த ஆண்டை விட நிக ழாண்டு பட்ஜெட்டில் விவ சாயத்திற்கான நிதியை ரூ. 900 கோடி குறைவாக ஒதுக் கீடு செய்துள்ளது. இதைக் கண்டித்துத் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம்-அகில இந் திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்- ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மணப்பாறையை அடுத் துள்ள பண்ணாங்கொம்பில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சிதம் பரம், வட்டத் தலைவர் பிச் சைக்கண்ணு, வட்டச் செய லாளர் சீனிவாசன், ராஜ கோபால், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்டப் பொரு ளாளர் கண்ணன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கோபால கிருஷ்ணன்,
சுரேஷ், நவ மணி, இளமாறன், சேது ராமன், அய்யாவு உள்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர். தா.பேட்டையில் விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் தங்கராஜ் தலை மையில் நடைபெற்ற போராட் டத்தில் ஒன்றியச் செயலா ளர் சேகர், விவசாயத் தொழி லாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் செல்லப்பெரு மாள், வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் சுதாகர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப் பினர் சிவராஜ். ஒன்றியச் செயலாளர் பாண்டியன். மர கதம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளா ளர் சுப்ரமணியன் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடைபெற்ற பட்ஜெட் நகலை எரித்த விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கந்த சாமி, கு.அர்ச்சுணன், வி. அண்ணாதுரை, இ.பன் னீர்செல்வம், ஆர்.கருப் பையா, த. கருப்பையா, க. முருகானந்தம், மு.செல்வ ராசு, க.அறிவழகன், மூ சீமான் உட்பட 30-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் பாபநாசத் தில் பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் முருகேசன், விவ சாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் அப்துல் கபூர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பி னர் காதர் ஹீசைன், ஒன்றி யச்செயலாளர் முரளீதரன் ஆகியோரைக் காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர்.