districts

பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 10 - கடந்த 2011ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் சேரலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையில் மக்கள் நலப்பணியாளர்களாக பணியாற்றி யவர்கள் கடந்த 8.11.2011 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தற்போது  அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்  திட்டத்தில் சேர்ந்து வேலை உறுதித் திட்டப்  பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம். இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்ட நிதியிலிருந்து ரூ.5000, மேலும்  கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2500 என மாதம் ரூ.7500 தொகுப்பூதியம் வழங்கப்படும்.  எனவே பணியிழந்த மக்கள்  நலப்பணியாளர்கள் விருப்பம் இருந்தால் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத் தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக வட்டார வளர்ச்சி  அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஏற்கனவே பணியாற்றியதற்கான விவரத்துடன் பணியில்  ஈடுபடவுள்ளதற்கான விருப்பக் கடிதத்தினை யும் ஜூன் 13 முதல் 18 ஆம் தேதிக்குள் வழங்க லாம். விருப்பக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் பணியாற்ற  வாய்ப்பு வழங்கப்படும். எனவே விருப்ப முள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். காலம் கடந்து வரும் விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என திருச்சி  மாவட்ட ஆட்சியர் சிவராசு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.