திருவனந்தபுரம், ஆக.5-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மாத நலத்திட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான தொகையை நிதித்துறை அனுமதித்துள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் ஓய்வூ தியம் விநியோகம் முடிக்கப்படும் என்று கேரள நிதி யமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்துக்கு ரூ.1,550 கோடி, நல வாரிய ஓய்வூதியத்துக்கு ரூ.212 கோடி உள்பட மொத்தம் ரூ.1,762கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 60 லட்சம் பேருக்கு தலா ரூ.3,200 ஓய்வூதியம் கிடைக்கும்.