districts

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய மூலங்குடி விளையாட்டு மைதானம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குடவாசல், மார்ச் 27 - குடவாசல் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு உரிய விளையாட்டு மைதானம் குடவாசல் அருகே உள்ள மூலங்குடியில் அமைந்துள்ளது. விளை யாட்டு மைதானம் சமூக விரோதிகள் போக்கிடமாக மாறி வருவதை தடுத்து  விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க  சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு உரிய ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந் துள்ள விளையாட்டு மைதானம் மூலங்குடியில் உள்ளது. கடந்த 2 வரு டமாக கொரோனா கட்டுப்பாடுகளால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் விளையாட்டு மைதானத்தை பயன் படுத்தாமல் இருந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாட் டுக்குள் வந்த நிலையில், தமிழகம் முழு வதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப் பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நி லையில் இந்த விளையாட்டு மைதா னத்தை, பொதுமக்கள் காலை, மாலை  நேரங்களில் நடைபயிற்சி, உடற்பயிற் சிகள் மேற்கொள்ள பயன்படுத்தி வருகின்றனர். இந்த மைதானத்தில் நடைபயிற்சி க்கு வரும் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி யிடம் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கைகளில், விளை யாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து பல இடங்களில் பாதை உள்ளது.  இதனால் ‘குடி’காரர்கள் விளையாட்டு மைதானத்தின் உள்புறம் இரவில் மது அருந்தி விட்டு போடும் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இத னைத் தடுக்கும் வகையில், இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுவரை சீர்படுத்தி, விளையாட்டு மைதானத்தை சுற்றி சுவர்  எழுப்பி, பாதுகாப்பாக வைக்க வேண் டும். அருகே உள்ள குடியிருப்பு வாசி கள் குப்பைகளை மைதானத்தின் உள்புறம் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்றி கழிவு களை கொட்டாமல் இருக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங் களிலும் இந்த மைதானத்தை பயன்ப டுத்தும் வகையில் நடைபயிற்சி தளம்  மற்றும் வாலிபால் உள்ளிட்ட விளை யாட்டுக்கான தளம் அமைத்து தர வேண்டும்.   மைதானத்தின் வாயிற்கதவு எப்போ தும் மூடியே உள்ளது. அந்த பகுதிக்கு செல்ல முடியாத வகையில் குப்பைகள் நிறைந்தும் உள்ளது. எனவே விளை யாட்டு மைதானத்திற்கென தனி பாதுகா வலரை நியமிக்க வேண்டும். உடனடி யாக விளையாட்டு மைதானத்தை சீர்  செய்து மேம்படுத்துவது, பொதுமக்க ளுக்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்து, தமிழக முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு சென்று, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும்  விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டுக் கொண்டுள்ளனர்.