districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சியிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்  தெற்கு ரயில்வே தகவல் 

கும்பகோணம், டிச.10-  திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில், வருகிற டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை மட்டும், திருச்சிராப்பள்ளி இருந்து வேலூர்கண்டோன்மெண்ட் வரை சிறப்பு ரயில் செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

அதன்படி அந்த சிறப்பு ரயில், திருச்சிராப்பள்ளியில் காலை 8 மணிக்குப் புறப்பட்டு, திருவெறும்பூர், பூதலூர்,  தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, சிதம்பரம், திருப்ப திரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம் வழியாக திரு வண்ணாமலையை மதியம் 1.20 மணிக்கு சென்ற டைகிறது.  

மேலும், தொடர்ந்து போளூர், ஆரணி ரோடு, வேலூர் கன்டோன்மெண்ட் வரை செல்கிறது. இந்த சிறப்பு ரயிலில் 7 பொதுப் பெட்டிகள், 7 ஸ்லீப்பர் பெட்டிகள் உள்ளன. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளு மாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

விவசாயிகள் குறைதீர் கூட்டம்:  கணினியில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், டிச.10 -  தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், டிச.12 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, ஆட்சியரக, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயி கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்பு தல் பெற்று, பின்னரே மனுக்களை அளிக்க வேண்டும்.  எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயி கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இலவச உணவு காளான் வளர்ப்பு பயிற்சி

தஞ்சாவூர், டிச.10 -  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST) சார்பாக, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில், “நவீன முறையில் உணவு காளான் வளர்ப்பு இலவச பயிற்சி” டிசம்பர் 18 முதல் 20  ஆம் தேதி வரை மூன்று நாட்கள் வழங்கப்படுகிறது.  

இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மதிய உணவும் அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ள மகளிர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவிலிருந்து மேற்கண்ட நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம். முன்பதிவு அவசியம்.

தஞ்சை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கும் கல்லூரி பேருந்து புறப்படும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04362 - 266791, 265191, அலைபேசி எண்: 9842649149 .இவ்வாறு கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்  பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர்,டிச.10- பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும்,குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல்,பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உட னுக்குடன் தீர்வு காண்பதற்கும்,சிறப்புப் பொது விநி யோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்,

பெரம்பலூர் வட்டம், புதுநடுவலூர் கிராமத்தில்  மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ச.சுந்தரராமன் தலை மையிலும், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் கிராமத்தில்,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலர் வி.வாசுதேவன்  தலைமையிலும், குன்னம் வட்டம், சித்தளி(மேற்கு) கிராமத்தில் மாவட்ட சமூக நல அலு வலர் இரா.ஜெயஸ்ரீ  தலைமையிலும். ஆலத்தூர் வட்டம்,  சிறுகன்பூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ரெ. சுரேஷ்குமார்  தலைமையிலும் 14.12.2024 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

 இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உண வுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்த மான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட  ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரி வித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் 
ஈடுபடும் போலி நபர்கள் மீது நடவடிக்கை

கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கரூர்,டிச.10-  பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்ட றிந்தால் அவர்கள் மீது  நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகை மற்றும் ஊட கம்,  பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்த வர்கள், இடைத்தரகர்கள் தங்களுக்கு உயர் அலுவ லர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றித் தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்து விடுவதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வரப்பெற்றுள் ளன.

இதுபோன்ற செயல்க ளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டு மில்லாமல் காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசுத்துறை  அலுவலகங்களிலும் மேற்கண்ட போலியான நபர் கள் அடையாள அட்டை களை பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டுவரு வது தெரிய வருகிறது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசு பணியில் உள்ள அலுவலர்க ளிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகை யில் பிறரின் கோரிக்கை மனுக்களை பெற்று அரசுத்துறைக்கு பரிந்தரை செய்வதாக கூறும் நபர்கள் குறித்து உடனடியாக தொ டர்புடைய அரசுத்துறை அலுவலகங்களுக்கு  தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செய லில் ஈடுபடும் நபர்கள் மீது  காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று  கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்  தெரிவித்துள் ளார்.

சிற்றுந்து ஓட்டுநர் கொலையை தடுக்கத் 
தவறிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர், டிச.10 -  தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியில் சிற்றுந்து ஓட்டுநர் கொலை சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாக காவல் நிலைய ஆய்வாளர் ரவி மதி செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அய்யம்பேட்டை பசுபதிகோவில் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவ மணிகண்டன் (28).

சிற்றுந்து ஓட்டுநர். இவருக்கும், அய்யம்பேட்டை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜெ.சுந்தரேசனுக்கும் (20) இடையே பெட்ரோல் பங்க்கில் டிசம்பர் 6 ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டது. இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் சிவ மணிகண்டன் புகார் அளித்தார். இதையறிந்த சுந்தரேசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவ மணிகண்டனை டிசம்பர் 7 ஆம் தேதி மாலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரேசன் உள்ளிட்டோர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

இந்நிலையில், டிசம்பர் 6 ஆம் தேதி ஏற்பட்ட தகராறு குறித்து சிவ மணிகண்டன் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுத்து சுந்தரேசனைக் கைது செய்திருந்தால், இந்தக் கொலை சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக காவல் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரவி மதியை தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியா உல் ஹக் செவ்வாய்க்கிழமையன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கார் மோதி  தொழிலாளி பலி

தஞ்சாவூர், டிச.10 -  தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே உள்ள மேளக் களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ். சுதாகர் (58). கூலித் தொழிலாளி.

இவர் திங்கள்கிழமை மாலை சித்தர்காடு கிராமத்தில் நூறு நாள் வேலைக்கு சென்ற தனது மனைவி மைதிலியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.  விக்கிரவாண்டி - தஞ்சாவூர் புறவழிச் சாலை கடகடப்பை பிரிவு சாலைக்கு அருகே சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார் மோதியது.

இதனால் பலத்தக் காயமடைந்த சுதாகர் நிகழ்வி டத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுகா காவல்துறை யினர்  வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.