districts

திருச்சி காவேரி மருத்துவமனையில் குருதியியல், எலும்பு மஜ்ஜை மாற்று பிரத்யேக சிகிச்சை பிரிவு தொடக்கம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.9 - டெல்டா மாவட்டங்களில் முதன்முறை யாக திருச்சி காவேரி மருத்துவமனையில் குருதியியல் சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு  மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவுகளை உள்ளடக்கிய அதிநவீன பிரிவு தொடங்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கேஎம்சி மருத்துவமனை செயல் இயக்குனர் மரு.செங்குட்டுவன், சிறப்பு சிகிச்சை நிபுணர் மரு.சுப்பையா ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரத்தம் மற்றும் ரத்த போக்கு சம்பந்த மான பிரச்சனைகளை கையாளுவது ஹெ மட்டாலஜி என்ற துறையாகும். அதிகப்படி யான ரத்தப்போக்கு, ரத்த தட்டு அணுக் களின் பிரச்சனைகளாகவோ, ரத்தம் உறைத லின் விளைவுகளாகவோ இருக்கலாம். வெள்ளை அணுக்களின் குறைபாடுகள் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். எலும்பு  மஜ்ஜை மாற்று சிகிச்சை என்பது ஒருவ ரின் நோயுற்ற மஜ்ஜை  நீக்கப்பட்டு பொருத்த மான எச்எல்ஏ பொருந்திய நன்கொடையா ளரின் குருத்து அணுக்களை செலுத்தி நோயற்ற குருதியை உருவாக்கும் முறையா கும். உட்செலுத்தப்பட்ட குருத்து அணுக்கள்  செயல்பட தொடங்கும் வரை நோய்த்தொற்று  ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க நோயாளி  தனிமைப் படுத்தப்படுகிறார். 2020 இல்  திருச்சியில் முதன்முறையாக எலும்பு மஜ்ஜை  மாற்று சிகிச்சை சேவைகள் தொடங்கப் பட்டன. காவேரி மருத்துவமனையில் 24X7  ரத்த வங்கி, குருத்தணுக்கள் பிரித்தெடுத்தல் மற்றும் கிரையோ பிரெசர்வேஷன் வசதிகள் உள்ளன. சென்னை அல்லது வேறு ஊருக்குச் செல்லும் நோயாளிகளுக்கு ஹெ மட்டாலஜி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று  சிகிச்சை சேவைகள் திருச்சியில் கிடைப்ப தால் பொருளாதார சுமையை தவிர்க்கலாம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  பிரத்யேக சிகிச்சைப் பிரிவு தொடக்க விழாவில் காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் மரு.செங்குட்டுவன், பெஸிலிட்டி இயக்குனர் அன்புச்செழியன், மரு.செந்தில்வேல் முருகன், குருதியில் மற்றும் எலும்பு மஜ்ஜை  மாற்று சிகிச்சை நிபுணர் சுப்பையா, டாக்டர்  வினோத் குணசேகரன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.