தஞ்சையில் டிச.14 இல் வாகனங்கள் ஏலம்
தஞ்சாவூர், டிச.9- தஞ்சாவூர் மாவட்டத்தில், மது விலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப் பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்த புனேனி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, பொது ஏலம் டிசம்பர் 14 ஆம் தேதி (செவ்வாயன்று) காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் நீதிமன்றச் சாலை, பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏலம் விடப்படும் வாகனங்கள் அன்றைய தினம் காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் காலை 8 முதல் 10 மணி வரை ரூ.ஆயிரம் முன்வைப்பு தொகை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை ஆதார் கார்டு நகலுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொ கையுடன் இரண்டு சக்கர வாகனத்திற்கு ஜிஎஸ்டி விற்பனை வரி 12 விழுக்காடு மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ஜிஎஸ்டி விற்பனை வரி 18 விழுக்காடு ஆகியவற்றை ஏலத் தொகையுடன் சேர்த்து டிசம்பர் 14 அன்று உடனே செலுத்திட வேண்டும் என மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப் பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
குறைதீர் கூட்டம் \
தஞ்சாவூர், டிச.9- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட் டையில் டிசம்பர் 17 (வெள்ளியன்று) காலை 11 மணிக்கு, பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் பட்டுக் கோட்டை கோட்டத்திற்குட்பட்ட, பட்டுக் கோட்டை மற்றும் பேராவூரணி பகுதி யைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்தரங்கம்
தஞ்சாவூர், டிச.9- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பாப்பாநாடு காவல்நிலையங்க ளில், பெண்களை பாதுகாப்பது குறித்த சட்டஆலோசனை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமை வகித்தார். இதில், ஒரத்தநாடு வழக்கறி ஞர் சாரதா கலந்து கொண்டு பெண்க ளுக்கான பாதுகாப்பு குறித்தும், பாதிக் கப்பட்டவர்கள் காவல் நிலையம் வரும் போது, அவர்களுக்கு சட்டவிதிகளின் படி என்னென்ன உடனடி உதவிகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும், பெண்களைப் பாதுகாக்க அமைக்கப் பட்டுள்ள சட்டக் கருத்து குறித்தும் விளக்க உரையாற்றினார். இதில் பெண் காவ லர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
பணி வாய்ப்பு
தஞ்சாவூர், டிச.9- தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல் படும், தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலை, நாஞ்சிக்கோட்டை கிராமம், மேல வஸ்தாசாவடியில் செயல்படும் அரசு களிர் பணிபுரியும் மகளிர் விடுதிக்கு, துப்புரவாளர்-1 என்ற பணியிடத்திற்கும், உழவர் சந்தை அருகில், நாஞ்சிக் கோட்டை சாலை என்ற முகவரியில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆயா-2, சமையலர் - 1, தோட்டக்கா ரர்-1 (பெண்) ஆகிய பணியிடங்களுக் கும், தினக்கூலி அடிப்படையில் பணி புரிவதற்கு, அரசு சேவை இல்ல மேல் நிலைப் பள்ளியில் தங்கி கல்வி பயின்ற முன்னாள் மாணவிகளிடம் இருந்து டிசம்பர் 7 முதல் 31 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவல கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம், அறை எண்-303, மூன்றாவது தளம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், dswo.tnj@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ, டிசம்பர் 31 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப் படும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப் பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு அரசு சேவை இல்ல தொலைபேசி எண்: 04362-255287, மாவட்ட சமூக நல அலுவலக தொலை பேசி எண் 04362-264505 ஆகிய எண்க ளில் தொடர்பு கொள்ளலாம். சமையலர் பணிக்கு ரூ.514, ஆயா, பெண் தோட்டக்காரர், துப்புரவாளர் ஆகிய பணிகளுக்கு ரூ.429 தினக்கூலி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
தஞ்சாவூர், டிச.9- தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான சாதாரண தேர்தலில் 4 லட்சத்து 77 ஆயிரத்து 868 வாக்கா ளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் குறித்து, புகைப்படத்துடன் கூடிய வாக்கா ளர் பட்டியல்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வியாழன்று வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் பேசியா வது:- ‘‘நமது மாவட்டத்தில் 1 மாநக ராட்சி, 1 நகராட்சி மற்றும் 20 பேரூ ராட்சிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக் கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை தஞ்சா வூர் மாநகராட்சி ஆணையர், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணை யர் மற்றும் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியில் 1,99,506 வாக்காளர்களும், பட்டுக் கோட்டை நகராட்சியில் 62,477 வாக்காளர்களும் மற்றும் 20 பேரூராட்சிகளில் 2,15,885 வாக்காளர்களும் என மொத்தம் 4,77,868 வாக்காளர்கள் உள்ளனர். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டது’’ என்றார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (தேர்தல்) மங்கை யர்க்கரசி, வட்டார வளர்ச்சி அலு வலர் (தேர்தல்), வீரமணி, மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிர முகர்கள் மற்றும் அரசு அலுவ லர்கள் பலர் உடனிருந்தனர்.