districts

திருச்சி முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கல் 

கும்பகோணம், ஜன.13- கும்பகோணத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு தார்ப்பாய்களை கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன்  வழங்கினார். கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறையின் கீழ் அட்மா வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான 11  விவசாயிகளுக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்ப ழகன் முழு மானிய விலையில் தார்ப்பாய்களை வழங்கினார். இதில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலை வர் குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், வட்டார தொழில்நுட்ப  மேலாளர் மாதா லட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்  தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக கும்பகோணம் சட்டமன்ற தொகுதி அண்ண லக்ரஹாரம் ஊராட்சி முகந்த நல்லூர் கிராமம் கருப்பு தெரு வைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மின் விபத்து ஏற்பட்டு  இறந்ததை தொடர்ந்து அவரது மகன் குருமூர்த்தி என்பவருக்கு  தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதியாக ஐந்து லட்சம் ரூபா ய்க்கான காசோலையை எம்எல்ஏ அன்பழகன் வழங்கினார். 

ரேசன் கடையில் ஆட்சியர் ஆய்வு

குடவாசல், ஜன.13- குடவாசல் பேரூராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடையில்  மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.  குடவாசல் பேரூராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடையில்  மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வுசெய்து, பொங்கல்  பரிசு எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது, அனைத்து பொருட்களும் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.  பின்னர் பயனாளிக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பையை வழங்கி, மாதந்தோறும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட் கள் தரமானதாக உள்ளதா என்றும், எடை சரியாக உள்ளதா  என்றும் நேரடியாக குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டு விபரம்  தெரிந்து கொண்டார். ஆய்வின்போது மாவட்ட வட்ட வழங்கல்  அலுவலர் கீதா, வட்டாட்சியர் உஷாராணி, வட்ட வழங்கல் அலுவலர்  சிவதாஸ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

மருத்துவ குணம் கொண்ட கருப்புகவுனி நெல் சாகுபடி வீழ்ச்சி

 சீர்காழி, ஜன.13- குறைந்துவரும் கருப்பு கவுனி நெல் ரகங்களை மேம்படுத்தி அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. நெல் ரகங்களில் மிகவும் முதன்மையா னதும், தலைசிறந்த பயிராகவும் கருப்பு கவுனி  நெல் இருந்து வருகிறது. இந்த வகையான நெல் மணியும் கருப்பாக இருக்கும். இந்த  நெல்லிலிருந்து பெறப்படும் கருப்பு கவுனி அரிசி பாரம்பரிய ரகத்தை சார்ந்ததும் அதிக  மருத்துவ குணம் கொண்டதும் ஆகும்.  இது உடல் தசைகளை மேம்படுத்துதல், நரம்புகளை மேம்படுத்துதல், இதயம், நுரை யீரல் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்பு களையும் பாதுகாக்கும் சிறந்த மருந்தாகவும்  இருந்து வருகிறது. இதில் நார்ச்சத்து அதிக  அளவில் உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளி களுக்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படு கிறது. கருப்பு கவுனி அரிசி உண்பதன் மூலம்  கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற முடி கிறது. இதனால் இதயத்தின் நலமும் பாது காக்கப்படுகிறது.  காலப்போக்கில் இந்த கருப்பு கவனி அரிசி  பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 40 ஆண்டு களுக்கு முன்பு குறிப்பிட்ட சில இடங்களில்  கருப்பு கவுனி என்ற அரியவகை நெல்  பயிரிடப்பட்டு வந்தது. அதிக நிலம் வைத்தி ருப்போர் மற்றும் நிலச்சுவான்தார்கள் மட்டுமே  குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று ஏக்கர்  நிலங்களில் கருப்புகவுனி நெல்லை சாகுபடி  செய்து வந்தனர்.  கொள்ளிடம் பகுதியில் மட்டும் சுமார் 2ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த இந்த  கருப்பு கவுனி நெல் பயிர் தற்போது  பரப்பளவு  குறைந்துள்ளதால் கொள்ளிடம் வட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 100 ஏக்கரில் மட்டுமே  இந்த நெல் பயிரிடப்பட்டு வருகிறது.  எனவே இந்தப் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த  கருப்புகவுனி நெற்பயிரை பயிரிடும் நிலப்பரப்பை அதிகப்படுத்தி மேம்படுத்த தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

தஞ்சாவூரில் 27,990 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி

தஞ்சாவூர், ஜன.13 - தஞ்சாவூர் மாநகராட்சி கல்லு குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா ஊக்குவிப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை நடைபெற்ற கொரோனா தடுப்பூசி  முகாம்கள் மற்றும் மெகா தடுப்பூசி  முகாம்கள் மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட 20,38,500 பயனாளி களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப் பட்டு 17,60,782 (86 விழுக்காடு)  பயனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10,71,205 (52 விழுக் காடு) பயனாளிகளுக்கு இரண்டாம்  தவணை தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.  கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையி லான 1,11,400 சிறார்களுக்கு  (பள்ளி, கல்லூரி செல்லும் மற்றும் செல்லாதவர்) தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இதுவரை 87,431 (78  விழுக்காடு) சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜன.10 முதல் சுகாதா ரப் பணியாளர்கள், முன்களப் பணி யாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு ஊக்குவிப்பு தவணை செலுத்தப்ப டுகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலை யங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அனைத்து ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், அரசு  மருத்துவமனைகளில் இம்முகாம் கள் நடைபெற்று வருகின்றன.  இம்முகாம்கள் மூலம் சுமார் 27,990 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 318 பய னாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிற்கும்  4 பணியாளர்கள், மேற்பார்வையா ளர்கள், தனியார் தொண்டு நிறுவ னங்கள், தனியார் மருத்துவமனை, இந்திய மருத்துவ கழகம், செஞ் சிலுவை சங்கம், உள்ளாட்சி பிரதி நிதிகள் ஆகியோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இம்முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு மாவட்ட அளவி லான கூட்டங்களையும், வட்டார அள விலான கூட்டங்களையும் நடத்தி  அனைத்து துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள். தன்னார்வ  தொண்டு நிறுவன பணியாளர் களுக்கு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.  இம்முகாமில், முதல் தவணை தடுப்பூசி செலுத் திக்கொண்ட பயனாளிகள் அனை வரும் இரண்டாம் தவணை தடுப்பூசி யினை தகுந்த கால இடைவெளி யில் தவறாது செலுத்திக் கொள்ள வேண்டும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள 4,474  படுக்கைகளில் 1,031 படுக்கை களுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப் பட்டுள்ளது” என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்தார்.

ஒரு நாள் விடுப்பு போராட்டத்தால்  வெறிச்சோடிய கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

சீர்காழி, ஜன.13- தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியத்தின் பணி நீக்கத்தை ரத்து செய்து ஆணை வழங்கவும், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் புதனன்று கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கொள்ளிடம் ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் 42 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட 83 பேர் வேற்று பணிக்கு வராமல் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற வேண்டிய அனைத்து பணிகளும் நடைபெறவில்லை. இதேபோல் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளிலும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து ஊராட்சி பணிகளும் நடைபெறவில்லை.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பணியாளர்களும் வேலைக்கு செல்லவில்லை.

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில்  நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூர், ஜன.13- பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், ஒரு வார கால நாட்டு நலப்பணித் திட்ட முகாம், பட்டுக்கோட்டை அருகே உள்ள  சஞ்சய் நகர் மற்றும் சூராங்காடு ஊராட்சியில் ‘‘தூய்மை பணியில் இளைஞர் பங்கு’’ என்னும் தலைப் பில் நடத்தியது.  இந்த முகாமில், கிராம தூய்மை  பணி மற்றும் துப்புரவு பணி, குடிநீர் மற்றும் நீர் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்தல், சாலைகளில் வேகத்தடைகள் வண்ணம் தீட்டு தல், மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, மின் சாத னங்களின் பயன்பாடுகள் மற்றும் வயரிங் பயிற்சி, கொரோனா மற்றும்  டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஆகிய  பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. மேலும், பல் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை முகா மும் நடத்தப்பட்டது.  பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாது காப்பு விழிப்புணர்வு, கிராமப்புற இளைஞர்கள், மாணவர்களுக்கு கணினி பயிற்சி மற்றும் பல்வகை தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தும் என்னும் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடத்தப்பட்டது.  முகாமின் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். சூரங்காடு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.காத்த வராயன், சஞ்சய் நகர் ஊராட்சி மன்ற  முன்னாள் தலைவர் வில்லியம் ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரித் தாளாளர் எஸ்.டி.எஸ் செல்வம் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு பேசினார்.   முகாமில் இரண்டு அலகுகளை சேர்ந்த 89 மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு

அரியலூர், ஜன.13 - குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுக்கும் வகையில் 1436 விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள் ளார்.  மேலும், சைபர் கிரைம் குற்றங்களை பொறுத்த வரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக் கும் வகையில் 1436  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நகரம்  மற்றும் கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளன. பெண்க ளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 99  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 126 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில் போதை பொருளால் ஏற்படும் பாதிப்பு குறித்து நடைபெற்ற குறும்பட போட்டியில் அரிய லூர் மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட குறும்ப டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. பொங்கல் விளை யாட்டு போட்டிகளை கிராமங்களில் நடத்துவதற்கு சம்பந் தப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து அனுமதி பெற்று  நடத்திட வேண்டும் என்றார்.

வையகத்தூரில் ரேசன் கடை திறக்க  மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

நீடாமங்கலம், ஜன.13- திருவாரூர் மாவட்டம் வையகளத்தூரில் புதிய ரேசன் கடையை விரைந்து துவக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நீடா மங்கலம் ஒன்றியக் குழு மாவட்ட நிர்வா கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி கூறியதாவது: வையகளத்தூர் கிராம  மக்கள் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒளிமதி கிராமத்திற்கு சென்று ரேஷன்  பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.  இதுசம்பந்தமாக பலமுறை நேரில் முறை யிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  கோரிக்கை  மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நட வடிக்கையும் இதுவரை இல்லை. இனியும் தாமதம் செய்யாமல், வையகளத்தூர் கிராமத் திற்கு தனியாக புதிய ரேஷன் கடை திறக்கப் பட வேண்டும், கொத்தமங்கலம் கிராமத் தில் வசிக்கும் குடிமனை பட்டா இல்லாத  அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்,  மாவட்ட நிர்வாகம்  இதற்கான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.  வையகத்தூரில் எம்.ஜெயராமன் தலை மையிலும், கொத்தமங்கலத்தில் கே.கோவிந் தராஜ் தலைமையிலும் பேரவைக் கூட்டங்கள்  நடைபெற்றன.  இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்  ஆர்.சுமதி, நகர  செயலாளர் வி.தமிழ்மணி, ஒன்றிய குழு  உறுப்பினர்கள் டி.அண்ணாதுரை, ராபர்ட்  பிரைஸ், கிளை செயலாளர் ஜே.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வளம் சார்ந்த கடன் திட்டம் வெளியீடு

தஞ்சாவூர், ஜன.13- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி  (நபார்ட்) தயாரித்த தஞ்சா வூர் மாவட்டத்திற்கான வளம்  சார்ந்த கடன் திட்டம் ( பிஆர்பி - 2022-23) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் வெளி யிட்டார்.  இந்த நிகழ்வில், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் கே.பாலமுருகன், மாவட்ட வளர்ச்சி மேலாளர், ரிசர்வ்  வங்கி, முன்னோடி வங்கி அலு வலர் எம்.வெங்கடேசன், தஞ்சாவூர் ஐ.ஓ.பி மண்டல மேலாளர் கே.சங்கீதா, ஐ.ஓ.பி  முன்னோடி வங்கி மேலாளர் ஜே.சீனிவாசன், மகளிர் திட்ட  அலுவலர் பால கணேஷ், ஐ.ஓ.பி ஆர்எஸ்இடிஐ இயக் குநர் ஜே.சுமதி ஆகியோர் கலந்து கொண்டு திட்ட பிரதி களைப் பெற்றனர். 2022 -23 நிதி யாண்டில் தஞ்சாவூரில் முன்னுரிமைத் துறைகளுக்கு  வங்கி கடன் ரூ.9467.42 கோடி யாக அளவிடப்பட்டுள்ளது.

நகைக் கடன் தள்ளுபடி வழங்க கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.13 - ஏழை விவசாயத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், நிபந்தனைகளை தளர்த்தி, 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் கரம்பயம் பி கிளைக் கூட்டம் சி.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், கிளை செயலாளர் எஸ்.மாரிமுத்து ஆகியோர் பேசினர்.  இக்கூட்டத்தில், “நூறு நாள் வேலையை மாதத்தில் 7 நாட்கள் மட்டும் வழங்காமல், 30 நாட்களும் வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரப்படாமல் உள்ள நூறு நாள் வேலைத் திட்ட கூலியை உடனடியாக வழங்க வேண்டும்.  சாதாரண ஏழை, எளிய மக்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பயன்படும் வகையில், அரசு அறிவித்த 40 கிராம் நகைக் கடன் தள்ளுபடியில், நிபந்தனைகளை தளர்த்தி அனைவரும் பயனடையும் வகையில் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.