districts

img

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 18 - திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறு நீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 13 வரை நடைபெற்றது. இந்த மருத் துவ முகாமிற்கு மருத்து வமனையின் நிர்வாக இயக்கு னர் டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன் தலைமை வகித் தார். பின்னர் அவர் கூறுகை யில், இந்த முகாமில் சிறு நீரக சிகிச்சை மற்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் என்.கார்த்திகேயன், சிறுநீரக நோய்சிறப்பு மருத் துவர் கணேஷ் அரவிந்த் ஆகியோர் பங்கு பெற்றவர்க ளுக்கு இலவச ஆலோசனை  வழங்கினர். இதில் சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறு நீரக நோய், உயர் இரத்த  அழுத்தம், கை கால் வீக்கம், தற்காலிக சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட சிறுநீரக  பாதிப்பு, ரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆலோ சனைகள் மற்றும் சிறுநீர் கழிப் பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர்  கழித்தல், இரத்தம் கலந்து சிறுநீர் கழித்தல், சிறுநீரக கல் தொந்தரவு, சிறுநீரக கிருமி  தொற்று, சிறுநீரக புற்று நோய் போன்ற நோய்க ளுக்கு ஆலோசனைகள் வழங்கி, பரிசோதனைகளும் செய்யப்பட்டன. மேலும் சிறப்பு சலுகை யாக சிபிசி, யூரியா கிரியாட்டி னின், யூரின் ரொட்டின், சர்க்கரை அளவு, ரத்த அழுத் தம், யூ.எஸ்.ஜி அப்தமன், சிறு நீர் பரிசோதனைகள் தேவைப்பட்டவர்களுக்கு சலுகை விலையில் செய்யப் பட்டது. இம்முகாமில் 200 -க்கும் அதிகமானோர் கலந்து  கொண்டனர். மேல் சிகிச் சைக்காக 75 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்றார். மருத்துவ முகாம் ஏற்பா டுகளை மக்கள் தொடர்பு அதி காரி ஸ்டீபன், ஜெயபிரகாஷ் மற்றும் மருத்துவமனை ஊழி யர்கள் செய்திருந்தனர்.

;