districts

திருச்சி காவிரி பாலத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

திருச்சிராப்பள்ளி, செப்.8 - திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தி லிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பரா மரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி இப்பணிகள் மேற் கொள்ள 5 மாதம் ஆகும் என்பதால், மேற்படி  காவிரிப்பாலத்தின் மேல் செல்லும் வாக னங்களின் போக்குவரத்து செப்.10 ஆம் தேதி இரவு 12 மணி முதல் கீழ்க்காணும் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல்  அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழி யாக (காவிரி தென் கரைசாலை) சென்று  இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ்  சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல்  சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று  இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடதுகரை சாலை) வழி யாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக் கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடது புறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும்  சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழி யாக, திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க்சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி, இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை  (சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை)  பழைய பாலத்தின் வழியாக வந்து வலது புறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணாசிலை வந்த டைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல லாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக, காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட்  அடைந்து சென்னை  செல்லலாம். அவ்வாறே சென்னையி லிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1. டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்க மாக திருச்சியை அடையலாம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப் படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாக னங்கள் அண்ணாசிலை வழியாக, காவிரி  பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று, இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1. டோல்கேட் வழியாக செல்லலாம். காவிரி பாலம் பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளதையொட்டி மேற்கண்ட  மாற்றுப் பாதையில் பயணம் செய்து, பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

;