பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், ஜூன் 24- தஞ்சாவூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக வுள்ள 01-பதிவுரு எழுத்தர் பணியிடத்திற்கு (பொது பிரிவினருக்கான) விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதற்கான கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வியுற்ற வர்கள் விண்ணப்பிக்க லாம். விண்ணப்பங்கள் 15.7.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் உதவி இயக்குநர், நிலஅளவை பதிவேடுகள் துறை, அறை எண்:318, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர். அஞ்சல் குறி யீட்டு எண்: 613010 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்ப படிவங்களை https:/thanjavur.nic.in என்ற இணையதளத்தின் மூல மாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 27 குறைதீர் கூட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 24 - திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 4 மணியளவில் மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் லால்குடி வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட முகாமில் மண்ணச்ச நல்லூர் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனா ளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
அறந்தாங்கி, ஜூன் 24 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வழிகாட்டுதலின்படி மண மேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை எடுக்கும் ஆங்கில பட்ட தாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி நடைபெற்றது. மண மேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கங்கா கௌரி தலைமை வகித் தார். இதில் 36 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
யோகா தினப் போட்டி: பரிசு வழங்கல்
தஞ்சாவூர், ஜூன் 24- மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், தஞ்சாவூர் மண்டல மத்திய தகவல் தொடர்பு சார்பில் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கலை அறிவியல் கல்லூரி யில் மாணவர்கள் பங்கேற்ற யோகா சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மண்டல மத்திய தகவல் தொடர்பு உதவியாளர் அருண் குமார், கல்லூரி முதல்வர் சிவகுமார், தஞ்சை நேரு யுவ கேந்திரா இணை இயக்குனர் நீலகண்டன் ஆகியோர் பேசினர். கல்லூரி யோகா ஆசிரியர் யோகாநாத் சிறப்பு பயிற்சி அளித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டனர். யோகா தினத்தை முன்னிட்டு நடத்தப் பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாண வர்கள் பங்கேற்ற யோகா தின விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் சிவ குமார், நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் நீல கண்டன் ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்தனர்.
புதிதாக துவங்கிய அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
தஞ்சாவூர், ஜூன் 24 - தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி கள் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் தற்போது மாண வர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் க.எழிலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், “தமிழ கத்தில் 10 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலைக் கல்லூரி, திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரில் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆகிய இரு அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கவும், இதில் இளங்கலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல், கணிதம் ஆகிய 5 பாடப் பிரிவுகளுடன் தொடங்க அரசாணை அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 2022-2023 -ஆம் கல்வி ஆண்டுக் கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www. tngasa.org என்ற இணைய தள முகவரிகளில் பதிவு செய்ய லாம். திருக்காட்டுப்பள்ளியில் தொடங்க உள்ள புதிய அரசு கலைக் கல்லூரி, பூதலூர் ஊராட்சி ஒன்றிய பழைய அலுவல கத்தில் தற்காலிகமாக துவங்கப்படவுள்ளது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலைக் கல்லூரி, ஜாமியா அரசு உதவிபெறும் பள்ளியில் தற்காலிக மாக துவங்கப்பட உள்ளது. எனவே, அந்தந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவும், இது தொடர்பான மேலும் தகவல்களை பெற தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியின் உதவி மையத்தினை நேரில் அணுகி பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கூர் ஓரியண்டல் அரபி பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி
மயிலாடுதுறை, ஜூன் 24 - மயிலாதுறை மாவட்டம் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்கள் எஸ்.திவ்யா 518 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், அபிநயா 494 இரண்டாமிடமும், எஸ்.கவிபாலன் 468 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். அதே போன்று 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 84 சத வீத தேர்ச்சியடைந்துள்ளது. எஸ்.ஹரிணி 418 மதிப்பெண் பெற்று முதலிடமும், பி.அஹமது யூனுஸ் 412 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், தர்ஷினி 408 மதிப்பெண் பெற்று மூன்றாமி டமும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் இக்ரம் ரசூல், நிர்வாக சபை தலைவர் சிகாபுதீன் மற்றும் நிர்வாக சபை உறுப்பி னர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ஷாஜஹான் ஆகியோர் பாராட்டினர்.
காதிகிராப்ட் உதவி மேலாளர் கடத்தல்: ஒருவர் கைது
தஞ்சாவூர், ஜூன் 24 - தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் அகமது பாட்ஷா மகன் அப்துல்லாஷா (25). இவர் திருச்சி சாலை யில் உள்ள காதிகிராப்ட் நிறுவனத்தில், உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, காதிகிராப்ட் எதிரே நின்று கொண்டி ருந்த அப்துல்லாஷாவை 8 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளார். இது பற்றி அறிந்த அப்துல்லாஷாவின் தந்தை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவல்நிலையத்தில், புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலை யில், அப்துல்லாஷாவை மீட்ட காவல்துறையினர் பெரம்ப லூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த மனோகரன் (31) என்பவரை கைது செய்தனர். இந்த கடத்தல் குறித்து கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நகை கொடுக்கல்-வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், கடத்த லில் ஈடுபட்ட 7 பேரை தேடி வருகின்றனர்.