districts

திருச்சி விரைவு செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன.23- தஞ்சாவூர் மாவட்டம் திருஆரூரான் சர்க்கரை ஆலை  கரும்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்தும், தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்க தோகைமலை ஒன்றி யக் குழு சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஏ.முனியப்பன் தலைமை வகித்தார்.  விவசாயிகள் சங்க கரூர் மாவட்டச் செயலாளர்   கே.சக்திவேல், குளித்தலை ஒன்றியச் செயலாளர் டி. இளங்கோவன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்  ஏ.பெரு மாள், கிராம ஊராட்சி ஊழியர் சங்க கரூர் மாவட்டத் தலை வர் ஏ.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


விவசாயி மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

அரியலூர், ஜன.23- அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்த வர் கோவிந்தசாமி (86). இவர் தன்னுடைய வயலில்  ஆர்.எஸ்.பதி சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று காலை வயலுக்கு சென்றவர்  மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் கோவிந்த சாமியை தேடி சென்றுள்ளனர். அப்போது வயலில் கோவிந்தசாமியின் உடல் ரத்த கரையுடன் கிடந்துள்ளது.  இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில்  முதியவரை ஏற்றி வந்தது தெரியவந்தது. அவர்கள் முதி யவரை கொலை செய்து ஏற்றி வந்தார்களா? அல்லது இறக்கி விடும்போது அடித்து கொலை செய்தார்களா? என விசாரிக்கின்றனர். இந்நிலையில், கோவிந்தசாமியை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி, அவரது உறவினர்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


நாவல் அறிமுகக் கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.23- கன்னட எழுத்தாளர் நேமிசந்திரா எழுதிய ‘யாத்வஷம்’ என்ற நாவலை கே.நல்லதம்பி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சாகித்ய அகாடமியின் மொழி பெயர்ப்புக்கான விருதுபெற்ற இந்த நாவலின் அறி முகக்கூட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் ஞாயி றன்று நடைபெற்றது. இதில் நல்லதம்பி சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு, தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம்.ஸ்டாலின் சரவணன் அறிமுகவுரை நிகழ்த்தினார். துரை அரி பாஸ்கர், மைதிலி கஸ்தூரி ரெங்கன் ஆகியோர் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மாவட்டத் துணைச் செயலர் நேசன் மகதி வரவேற்க, மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார்.


பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உளுந்து விதை விநியோகம்

 பட்டுக்கோட்டை, ஜன.23-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சம்பா நெல் அறுவடைக்குப் பின், நெல் தரிசில் உளுந்து  சாகுபடிக்கான இலக்கு 4,000 ஏக்கர் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.  இதனால், நெல் தரிசில் உளுந்து சாகுபடி பரப்பினை  அதிகரிக்கும் நோக்கில், நடமாடும் உளுந்து விற்பனை நிலையம் அனைத்து கிராமங்களுக்கும் சென்று விவசாயி களுக்கு விதை விநியோகம் செய்து வருகிறது.  இதன்படி, பட்டுக்கோட்டை ஒன்றியம் கொண்டிக் குளம், நடுவிக்கோட்டையில், கழுகுப்புலிக்காடு ஆகிய  கிராமங்களில் திங்களன்று சுமார் 1,500 கிலோ விதை விநி யோகம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஜன.24, 25 இல் பாளமுத்தி, ஏனாதி, நம்பி வயல், கரம்பயம், வேப்பங்காடு ஆகிய கிராமங்களுக்கும்,  ஜன.26 இல், திட்டக்குடி, சூரப்பள்ளம், நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கும், ஜன.27 இல் அதிராம்பட்டினம், சேண்டாக்கோட்டை, புதுக் கோட்டை உள்ளூர், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, பள்ளிகொண்டான், முதல்சேரி ஆகிய கிராமங்களுக்கும்  வர இருப்பதால் விவசாயிகள் அனைவரும் விதை களைப் பெற்று பயனடையலாம் என தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்  பட்டுள்ளது.


சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை, 23-  புதுக்கோட்டை அருகே கரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் கடந்த ஆண்டு 14 வயது சிறுமியை குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படு கிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி தற்போது அவருக்கு பெண்  குழந்தை பிறந்துள்ளது.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.  இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், வழக்கு விசாரணை முடிந்து ஞாயி றன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அஜித்குமார் மீது சுமத்தப் பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டு, அஜித்குமாருக்கு ஆயுள் தண்ட னையும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சேர்த்து மொத்தமாக ரூ.4  லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக வழங்க அர சுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அஜித்குமாரை காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.