districts

திருச்சி: புறா பந்தயப் போட்டி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 10 - திருச்சி திருவானைக் காவல் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் வெள்ளிக் கிழமை காலை கர்ணபுறா பந்தயப்போட்டி துவங்கி யது. இந்த போட்டிகளில் 2  கர்ண புறா, 2 சாதா புறா  கூட்டுப் போட்டிகள் நடை பெற்றன. இதே போல் மலைக் கோட்டை, எடத்தெரு, மகா லெட்சுமிநகர், உறையூர், சோளம்பாறை ஆகிய பகுதி களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதில் கர்ண புறா விடும்  போட்டி சனி, ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறும். சாதா புறா விடும் போட்டி ஜூன் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த புறாக்கள் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரத் திற்கு குறையாமல் பறக்க  வேண்டும். புறா விடும் நபர் ்கள் தங்களது புறாக்களை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை தங்களுக்கு நியமிக்கப் பட்ட நடுவரிடம் காட்ட வேண்டும். காட்டிய பிறகு  நடுவர்கள் ஒரு மணிநேரத் திற்கு பிறகு தான் மீண்டும் புறாவை கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் காட்டிய புறா மிகவும் தாழ்வாக சந்தேகப்படும்படி பறந்தால் அரை மணிநேரத்திற்குள் புறாவை கேட்பதற்கு நடு வருக்கு உரிமை உண்டு.  இறுதியில் பொறுப்பா ளர்கள் கலந்து எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். போட்டி ஆரம்பிப் பதற்கு முன்பாக ஒவ்வொரு புறாக்களுக்கும் அடையாள முத்திரை வைக்கப்பட்டு பதிவு செய்யப்படும். போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டிக் கான ஏற்பாடுகளை தலைவர் பாபாபாலாஜி செய்திருந்தார்.