நூறு நாள் வேலை வழங்கக் கோரி மனு
திருச்சிராப்பள்ளி, மே 13- திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியத்திற்குட் பட்ட தீராம்பாளையம் ஊராட்சியில் கடந்த 4 மாதங்களாக நூறு வேலை வழங்கப்பட வில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 900 விவசாயத் தொழிலாளர்கள் வேலை யில்லாமல் அவதிப்படு கின்றனர். எனவே துரித நடவடிக்கை எடுத்து, இவர் களுக்கு நூறு நாள் வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய தலைவர் முத்தையன் தலைமை யில் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த போது, விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலா ளர் முருகேசன், செல்லப் பெருமாள், ரெங்கநாதன் மற்றும் கிராம மக்கள் உட னிருந்தனர்.
மே 17 - இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், மே 13 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மே 17 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணி அள வில் பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட, பட்டுக்கோட்டை, பேரா வூரணி வட்ட விவசாயி களுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு பட்டுக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி வித்துள்ளார்.
இன்று குறைதீர் கூட்டம்
கரூர், மே 13 - கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மே 14 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண் மங்கலம், புகளூர், குளித் தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்க ளில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் நடைபெற உள்ளது. எனவே, பொது மக்கள் மேற்படி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொ டர்பான தங்களது குறை களுக்கு தீர்வு காணுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.
தூய்மை பணி முகாம்
அறந்தாங்கி, மே 13 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் திருப்பெருந் துறையில் திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஆவுடையார்கோ விலை அடுத்த பெருநாவ லூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ஒரு வார சிறப்பு முகாம் திருப் பெருந்துறை ஊராட்சி யில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் பணிகளை கல்லூரி முதல்வர் (பொ) பேரா.மகேஷ்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு
தஞ்சாவூர், மே 13 - தஞ்சாவூரில் மாநக ராட்சிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 76,740 சதுரஅடி பரப்பளவு இடத் தினை மீட்டு, அதற்கான அறி விப்பை கதவில் ஒட்டினர். தஞ்சாவூர் அண்ணா சாலையிலிருந்து, கீழவா சல் செல்லும் சாலையில் உள்ள ஜூபிடர் திரைய ரங்கம் அருகே உள்ள காலி யிடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டு ,இருவர் கடை களை கட்டி வைத்திருந்தனர். இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடமாக இருந்த தால், இந்த இடத்தை மீட்க மாநகராட்சி ஆணையர் க.சர வணக்குமார் நடவடிக்கை களை மேற்கொண்டார். அதன்படி வியாழனன்று நகரமைப்பு அலுவலர் ராஜ சேகரன் தலைமையில், உதவி வருவாய் ஆய்வாளர் சங்கரவடிவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், காவல் துறை பாதுகாப்புடன் ஆக்கிர மிக்கப்பட்ட இடத்தில், தண் டோரா மூலம் அறிவிப்பினை வாசித்து, ஆக்கிரமிக்கப் பட்டு கட்டப்பட்டுள்ள கடை களின் கதவுகளில் அறிவிப் பாணையை ஒட்டினர். இந்த இடம் தனியார் ஆக்கிர மிப்பிலிருந்து, மாநகராட்சி வசம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. எனவே, அந்த இடங்களில் அத்துமீறிச் செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் கூறினார்.
தனியார் குடோன்களில் 8 டன் பிளாஸ்டிக் பறிமுதல்
கும்பகோணம், மே 13 - தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்-கெட்டுப் போன உணவுகள் பறிமுதல் என திடீர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி எல்லைக் குட்பட்ட அண்ணலக்கிரகாரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன், கும்பகோணம் பெரிய கடை வீதியில் மொத்த பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 குடோன்கள் அண்ணலக்கரகாரம் பகுதியில் உள்ளது. இதில் பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆய்வு கொண்டனர். அதில், 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் குடோனின் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, குடோன்களுக்கு சீல் வைக்கப் பட்டது. மேலும் எந்தவித உரிமையும் இல்லாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சிமெண்ட் பேக்டரிக்கு எரிபொரு ளாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.