சிபிஎம் பாபநாசம் ஒன்றியக்குழு கூட்டம்
பாபநாசம், நவ.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றி யக் குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் மாநில, மாவட்டக் குழு முடிவுகள் குறித்து விளக்கினார். செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்டக் குழு உறுப்பினர் காதர் ஹீசைன், ஒன்றியச் செயலாளர் முரளி தரன் உட்பட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். கூட்டத்தில், கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலை யை உடனடியாக சீரமைக்கக் கோரி நவம்பர் 29-ஆம் தேதி பாபநாசம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது, பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீ விபத்து: தையல் கடை சேதம்
தஞ்சாவூர், நவ.28- தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி வாடிவாசல் கடைத் தெருவில் தையல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் (62). இவர் திருப்பதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் தஞ்சாவூ ருக்கு திங்களன்று வந்தார். அதிகாலை நேரமாக இருந்த தால் வீட்டுக்குச் செல்லாமல், கடைக்குச் சென்று படுத்துக் கொண்டார். அப்போது, கடைக்குள் இருந்து புகை வரு வதை பார்த்த தீப்பற்றி எரிவது தெரிய வந்தது. தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். இத னால், கடையில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி சேதமடைந்தது. இந்த விபத்து மின் கசிவு காரண மாக ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
கரூர், நவ.28- தேசிய குழந்தைகள் அறிவியல் 30-வது மாநாடு கரூர் மாவட்ட பரணி பார்க் கல்வி குழும தாளாளர் எஸ்.மோகன ரங்கன் தலைமையில் நடைபெற்றது. பரணி பார்க் பள்ளி செயலாளர் பத்மாவதி மோகனரங்கன் வரவேற்று பேசி னார். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்.கீதா தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) க.கனகராசு, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஆர்.மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) பெ.கண்ணிச்சாமி, பரணிபார்க் கல்வி குழுமம் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராம சுப்பிரமணியம், பரணிபார்க் பள்ளி குழும முதல்வர்கள் கே. சேகர், எஸ்.சுதாதேவி, மாவட்ட இணைச்செயலாளர் பாஸ் கர், மாநிலச் செயலாளர் எம். மெஹபுனிஷா, பாரதி புத்தகாலயம் பொறுப்பாளர் நாகராஜ், கரூர் மாவட்ட செய லாளர் ஜான்பாட்ஷா, மாநில பொறுப்பாளர்கள் எம்.தியாக ராஜன், முகமதுபாதுஷா வாழ்த்தி பேசினர். மாநாட்டில், கரூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 39 ஆய்வுகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்றது. மாநில மாநாட்டில் பங்கேற்க தேர்வு பெற்ற ஆய்வுகளுக்கு தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் க.கனகராசு நினைவு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
வெண்மணி தினத்தையொட்டி டிச.17-23 மக்கள் சந்திப்பு நடைபயணம்
மயிலாடுதுறை, நவ.28- மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களை சந்திக்கும் நடைபயண பிரச்சா ரம் டிசம்பர் 17 முதல் 23 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவுள்ளது. வெண்மணி தினத்தையொட்டி நடைபெறவுள்ள பிரச்சார பயணத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிவதற்கு பிரச்சார பயண முன் னேற்பாடு குறித்த சிறப்பு பேரவைக்கூட்டம் திருக்கடையூர் கட்சி அலுவலகத்தில் திங்களன்று தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், செம்ப னார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி சீனிவாசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் ஒன்றி யங்களை சேர்ந்த கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்? அமைச்சர் எஸ்.ரகுபதி சாடல்
புதுக்கோட்டை, நவ.28- ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் திங்களன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இணையவழி சூதாட்டமான ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல், ஒழுங்குமுறைப்படுத்துதல் ஆகியவற்றை அவசரகால சட்டம் ஞாயிற்றுக்கிழமையோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதனடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ போன்ற இணைய வழி சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. அதன்பேரில் தமி ழக அரசு சட்டமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை. சட்டம் காலாவதி ஆகிவிட்டதால் ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில்தான் இனி தமிழக அரசு இந்த விவகா ரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்பு தான் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழக அரசு அமல் படுத்த முடியும். தற்போது அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்கள் தான் கூற வேண்டும்’’ என்றார்.