இன்று அதிராம்பட்டினத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம்
தஞ்சாவூர், நவ.18 - தஞ்சாவூர் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன், நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் கல்லணை யில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ராஜாமடம் கிளைக்கால்வாய், அதன் கிளை வாய்க்கால்கள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்படுகின்றன. இப்பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ.19) காலை 10:30 மணிக்கு அதிராம்பட்டினத்தில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க அரங்கில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாதுரை, கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். எனவே, இக்கருத்து கேட்புக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்” என கூறப்பட்டு உள்ளது.
நூற்பாலை தொழிலாளர்கள் சாலை மறியல்
அறந்தாங்கி, நவ.18 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகம் துரை யரசபுரம் கூட்டுறவு நூற்பாலையில் கூட்டுறவு நூற்பாலை தொழிலா ளர்கள், அண்ணா தொழிற்சங்க தலைவர் தாய் மாதவன், தொ.மு.ச, பி.எம்.எஸ் தொழிற்சங்கத்தினர் இணைந்து ஆவுடையார்கோவில் - அறந்தாங்கி சாலை மறியல் செய்தனர். எட்டு மணி நேர பணியில் தற்போது 80 கிலோ நூல் எடுப்பதை 110 கிலோவாக எடுக்க சொல்வதை கண்டித்தும், ஒப்பந்த பணிகளை சாய்ராம் என்ற தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்ததை கண்டித்தும் மறியலில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கர்ணா, அறந்தாங்கி பொறுப்பாளர் அலாவுதீன் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். பின்னர், நூற்பாலை மேலாளர் வெங்கடேசன் நடத்திய பேச்சு வார்த்தையில், மில் நிர்வாகத்தினர் 30 ஆம் தேதி வந்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதால், அதுவரை 80 கிலோ நூல் எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் அமர இருக்கை வழங்கல்
தஞ்சாவூர், நவ.18 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள இடையாத்தி தெற்கு, வெள்ளாளர் தெரு, வேளாம்பட்டி, வாட்டாத்திக்கோட்டை தெற்கு, நெய்வவிடுதி ஆகிய இடங்களில் இயங்கி வரும் 5 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லாமல், மாண வர்கள் தரை விரிப்பில் அமர்ந்து கல்வி கற்று வந்தனர். இதுகுறித்து அறிந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவ லம் மூர்த்தி, மாவட்ட ஊராட்சி 15 ஆவது நிதிக் குழு மானியத்தில் இருந்து, பள்ளி மாணவர்கள் அமர இருக்கைகள் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து 5 பள்ளிகளுக்கும் 33 ஜோடி இருக்கை, மேஜை வாங்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப் பட்டது. இதற்கான விழா அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சி களில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மூர்த்தி இருக்கைகளை வழங்கி னார்.
பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழா
புதுக்கோட்டை, நவ.18 - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றிப் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாரா ட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கியும், சிவகங்கை மாவட்டத்தி லிருந்து வந்தடைந்த தொ டர் தீபத்தினையும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பெற்றுக் கொண்டார். புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், இணை இயக்குநர் ஊரக நலப் பணி கள் மரு.ராமு, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மருத்துவக் கல்லூரி முதல் வர் மரு.பூவதி, இணை இயக்குநர் ஊரக நலப் பணிகள் (ஓய்வு) மரு.சகாய மேரி ரீட்டா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இலவச கழிவறை சீர் செய்யப்படுமா?
கும்பகோணம், நவ.18 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கும்பகோணம் மாநகர குழு சார்பாக மாநகர செயலாளர் சுமதி, மாநகர குழு உறுப்பினர் ஜோதி ஆகியோர் மாநகர ஆணையர் செந்தில்முருகனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில், “கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் பெண்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிவறையை சீர்செய்து தொடர்ந்து பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கும்பகோணம் மாநகரில் கூடுதல் இலவச கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும். மாநகராட்சி சார்பில் இருக்கும் அனைத்து கழிவறைகளும் போதிய பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் பயன்படுத்த முடியாமல் உள்ளன. எனவே புதிதாக அமைக்கக்கூடிய கழிவறைகளை தொடர்ந்து பராமரிக்கக் வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.