4.66 மெட்ரிக் டன் விதை நெல் விற்க தடை விதிப்பு
தஞ்சாவூர், மே 18 - தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கி இருப்பதால் விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய, கோவை விதைச்சான்று இயக்குநர் மு.சுப்பையா உத்தர வின்படி, மதுரை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் முருகேசன் தலைமையில், விதை ஆய்வாளர்கள் குழுவி னர் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதியில் 11 தனி யார் மற்றும் 6 அரசு விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதை உரிம விவரங்கள், விதை இருப்பு, கொள்முதல் செய்த விதைகளின் விலைப்பட்டியல், விவசாயி களுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை ஆய்வு செய்த னர். தொடர்ந்து விதைகளின் தரத்தை உறுதி செய்வதற் காக 22 அலுவலக விதை மாதிரிகளை சேகரித்து, விதை பரி சோதனை நிலையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. ஆய்வில் விதைச்சட்ட விதிகளை மீறியது தொடர்பாக ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள 4.66 மெ. டன்கள் விதை நெல் மற்றும் இதர விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டது.
பங்குதாரர் ரூ.3.10 கோடி மோசடி செய்ததாக புகார்
தஞ்சாவூர், மே 18 பெரம்பலூர் மாவட்டம் சோமநாதபுதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் அளித்துள்ள புகார் மனுவில், நானும், தஞ்சையை அடுத்த மின்னத்தூர் குருங்குளம் மேற்குப் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரும் இணைந்து பங்கு தாரர்களாக முந்திரி வியாபார நிறுவனம் நடத்தி வந்தோம். நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை, நான் தணிக்கை செய்தபோது சிவக்குமார் ரூ.3 கோடியே 10 லட்சம் அளவுக்கு மோசடி செய்ததை கண்டுபிடித்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, பணத்தை திருப்பி தருவதாக என்னிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டார். ஆனால் பல நாட்களாக பணத்தை திருப்பித் தர வில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது முறையாக பதி லளிக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் மோசடி செய்த பணத்தை மீட்டு தர வேண்டும்” என தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் (பொ) ரவிமதி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேளாண் தொழில்நுட்ப பயிற்சி முகாம்
கரூர், மே 18 - தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரவக்குறிச்சி வட்டாரம் சார்பில் மாநில விரிவாக்கத் திட்டங்க ளுக்கு உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி முகாம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், சீத்தப்பட்டியில் நடைபெற்றது. முகாமில் மண்புழு உரம் தயாரித்தல், மண் பரிசோ தனை, நவீனா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறைகள், இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகள், கெமிக்கல் கலந்த உரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவசாயி களிடம் தெரிவித்தனர். அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜி.சரஸ்வதி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். புழுதேரி அறிவியல் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் மண்ணியல் வல்லுநர் மாரிக்கண்ணு பயிற்சி வழங்கினர். தொழில்நுட்ப மேலாளர் பி.சர்மிளா, உதவி தொழில்நுட்ப மேலாளர் எம். இந்துமதி ஆகியோர் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். கொடையூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கல்வியறிவு விழிப்புணர்வு இயக்கம் தொடக்கம்
தஞ்சாவூர், மே 18 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க் கிழமை, கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, மக்கள் கல்வியறிவு விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, பல்கலைக்கழக துணைவேந்தர் முனை வர் வி.திருவள்ளுவன் தொடங்கி வைத்துப் பேசினார். கல்வியி யல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் சா.இரவிவர்மன் வரவேற்றார். பதிவாளர் (பொ) முனைவர் க.சங்கர், மருது பாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப.சுப்பிர மணியன், வளர் தமிழ்ப்புல முதன்மையர், முனைவர் கு.சின்னப் பன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞா.பழனிவேலு நன்றி கூறினார்.
மே 24 முதல் ஓவியப் பயிற்சி
திருச்சிராப்பள்ளி, மே 18 - திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடைக்கால ஓவிய சிறப்பு பயிற்சிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளன. மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டத்துடன் இணைந்து இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். வகுப்புகள் மே 24 ஆம் தேதி தொடங்கி, மே 26 ஆம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறு கின்றன. இதில் ஓரிகாமி, பாப் ஆப் கலை வடிவ பயிற்சிகள் அளிக்கப்படு கின்றன. பயிற்சிகளை அரசங்குடி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அருணா பாலன் வழங்கவுள்ளார். பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் சார்ட் ஏ 3 அளவு, டபுள் சைடு கலர் பேப்பர், பெவிக்கால், கத்தரிக்கோல், கட்டர், ஸ்கெட்ச் பேனா ஆகியவற்றை மாணவ, மாணவியர் தாங்களே எடுத்து வர வேண்டும்.இப்பயிற்சிக்கு அனுமதி இலவசம். இதில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.