திருத்துறைப்பூண்டி, மார்ச் 18 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் மறைந்த தோழர் ஆர்.தாமோதரனுக்கு திருத்துறைப்பூண்டி கிளை சார்பில் புகழ் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் வழக்கறிஞர் வி.வி.செந்தில் குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் டி.வி. புரட்சிதாசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பாலம் செல்லதுரை, நாடக நாடி கலைஞர் கரிகாலன் ஆகி யோர் இசை அஞ்சலி செலுத் தினர். மாவட்ட பொருளாளர் கவிஞர் மா.சண்முகம், கவிஞர் ஜோசப் ராஜ் ஆகி யோர் கவிதாஞ்சலியை காணிக்கை ஆக்கினர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க பொறுப்பாளர்கள் ஜீ.தருமையன், வி.ஆர்.லெனின், தமிழ்நாடு ஆரம் பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் வி.ராஜேந்திரன், தமிழ் நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பி. ஜெகவீரன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ், பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.நவமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய தொழிற் சங்க மைய மாவட்ட இணைச் செயலாளர் உ.ராமச்சந்தி ரன், லிகாய், டாஸ்மாக் ஊழியர் சங்கம், ஆட்டோ சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகழஞ்சலி செலுத்தினர்.