திருச்சிராப்பள்ளி, மே 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழ் முதன்மை பொது மேலாளருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஞாயிற்றுக் கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித் தார். கூட்டத்தில் தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் பன்னீர்செல்வம், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மூத்ததோழர் இந்து ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர் ஆகி யோர் புகழஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை ரயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரக் குழு சார்பில், எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உருவப்படத் திற்கு, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி, மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, என்.சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பி.சத்தியநாதன், திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜூன், மாநகரக்குழு உறுப்பினர் எம்.ராஜன், போக்குவரத்து சங்கம் ராமசாமி, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி னர்.
நாகப்பட்டினம்
சிபிஎம் தெற்கு ஒன்றியம் சார்பில் மறைந்த தோழர் எம்.என்.எஸ்.-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முருகையன், நாகை தெற்கு ஒன்றி யச் செயலாளர் ஏ.வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
கட்சியின் அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடா சலம் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல், கே.மகாராஜன், எஸ்.என்.துரைராஜ் ஆகியோர் முன்னி லையில் காந்தி பூங்கா முன்பு எம்.என்.எஸ். வெங்கட்டராமனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொன்னமராவதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய குழு சார்பில் அஞ்சலி, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.சண்முகம், ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், விவ சாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.எல்.பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர்
கட்சியின் கரூர் மாநகரக் குழு சார்பில் மாவட்டக் குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு கட்சியின் மாநகரச் செய லாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். கரூர் ஒன்றியக் குழு சார்பில் புகளூர் நான்கு ரோட்டில் உள்ள கட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் எம்.என்.எஸ். உருவப்படத் திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டது. பின்னர் நடைபெற்ற அஞ்சலி கூட்டத் திற்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் பேசி னர். மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகம், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் அ.காதர் பாட்ஷா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், புகளூர் நகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் இந்துமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.