புதுக்கோட்டை, ஜூன் 28-
புதுக்கோட்டை அருகே பழங்குடியினர் குடியிருப்பு அடிப்படை வசதி கேட்டு வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட் டம் செம்பாட்டூர் அருகே வள்ளிநகரில் தொட்டி நாயக் கர் என்ற பழங்குடியினத் தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வரு கின்றனர். இங்கு புதர் மண்டிக் கிடப்பதாலும், தெருவிளக்கு இல்லாததாலும் பாம்புத் தொல்லையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில், செவ் வாய்க்கிழமை ஓர் இளை ஞர் பாம்புக் கடியால் பாதிக் கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இதையடுத்து, அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் டி. சலோமி தலை மையில், அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் சி.அன்புமணவாளன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த மறியல் குறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் உடனடியாக அப்பகுதியில் தூய்மைப் பணி நடத்தி புதர் களை அகற்றி மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்த னர். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.