districts

img

பேருந்து படிக்கட்டுகளில் பயணம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை

திருச்சிராப்பள்ளி, அக்.9 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் சங்கம்  சார்பில் மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் முருகன், திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் சரண் யாவிடம் திங்களன்று கோரிக்கை மனு கொடுத்தார்.  அந்த மனுவில், “தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 1988 பேருந்து படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்வதை தடை  செய்துள்ளது. ஆனால் அரசுப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பய ணிகள் ஓட்டுநர்-நடத்துநர்களின் விபத்து அபாயம் குறித்த எச்சரிக் கையையும் மதிக்காமல் தொடர்ந்து  படிகளில் நின்றும், தொங்கிக் கொண்டும், கால்கள் சாலையில் உரசும் நிலையில் பயணம் செய் கின்றனர். மேலும் படியில் தொங்கும் பள்ளி மாணவர்களும், பயணிகளும்  கீழே விழுந்து விடுவதும், பேருந்து படியின் அடிப்பகுதிகளில் காலை  விடுவதால் வேகத்தடை மற்றும்  சாலையில் கால் அடிபடும் நிகழ்வு களும் தொடர்ந்து நடக்கின்றன. இத னால் ஓட்டுநர்-நடத்துநர்கள் துறை  ரீதியான மற்றும் நீதிமன்ற நட வடிக்கைகளுக்கு உள்ளாகின்ற னர். படிக்கட்டில் நின்றுகொண்டும், தொங்கிக் கொண்டும் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர் களும், நடத்துநர்களும் பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட பயணிகளை எச்சரிக்கைப்படுத்தும் போது, அவர் களால் ஓட்டுநர் மற்றும் நடத்து நர்கள் தாக்கப்படும் சம்பவங்களும்  தொடர்கதையாக உள்ளன. எனவே ஓட்டுநர் - நடத்துநர்கள் துறை ரீதியான மற்றும் நீதிமன்ற நட வடிக்கைகளுக்கு உள்ளாகும் நிலையை தவிர்க்கவும், விபத்து களை தவிர்க்கவும், பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்தும் வகையிலும், அரசுப் பேருந்து நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து, பேருந்துப் படிக்கட்டுகளில் பயணம்  செய்வதால் ஏற்படும் விபத்து, பயணத் தடை, மற்ற பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என கூறியிருந்தார். மாவட்ட துணை ஆட்சியரிடம் மனுவை கொடுத்த போது, சங்க  துணைத்தலைவர் பிரபு, மலைக் கோட்டை கிளைச் செயலாளர் அர விந்த்ராஜ், கிளைப் பொருளாளர் சாய்ராம், துணைச் செயலாளர்கள் சுப்ரமணியன், குணசேகரன் ஆகி யோர் உடனிருந்தனர்.