districts

img

பணி மாறுதல் பரிந்துரை கோரி வர வேண்டாம்!

அரியலூர், டிச.14 - பணி மாறுதல் கோரி சிபாரிசுக்கு யாரும் வராதீர்கள் என ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவ சங்கர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பணிமனை யில் புதிய குளிரூட்டப்பட்ட அறையினை  திறந்து வைத்தார். மேலும், நாகப்பட்டி னம், திருச்சி, காரைக்குடி ஆகிய மண்டலங் களில் பணியின் போது இறந்த தொழிலாளர் களின் வாரிசுதாரர் 42 பேருக்கு புதிய பணி  நியமன ஆணையை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசுகையில், “தமிழ கத்தில் போக்குவரத்துத் துறையில் கடந்த ஆட்சியைவிட, திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது 42 பேருக்கு பணி நியமன ஆணை  வழங்கப்பட்டுள்ளது.  புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட வர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து,  கடமையோடு பணியாற்ற வேண்டும். பணி நியமனம் விஷயத்தில் எந்த ஊருக்கு பணி  கொடுத்தாலும் வேலை செய்ய வேண்டும். அதை விடுத்து நமக்கு அமைச்சர் இருக் கிறார் என்று, தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற் போல் பணி மாறுதல் கேட்டு யாரும் என்னி டம் சிபாரிசுக்கு வர வேண்டாம்” என்றார்.  நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் எம்எல்.ஏ க.சொ.க.கண்ணன், மாவட்ட வரு வாய் அலுவலர் கலைவாணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன்,  திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலா ளர் சக்திவேல், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்ற னர்.