மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி தியாக உணர்வை பறைசாற்றும் வகையில், பட்டுக்கோட்டையில் அன்னாரின் நினைவு மணிமண்டபம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தமிழக அரசின் சார்பில் மொழிப்போர் தியாகி அழகிரிசாமியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.