திருவாரூர்.ஜன.18- திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல் கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் சார்ஜ் பால் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப் பந்தம் கையெழுத்தானது. துணைவேந்தர் மு. கிருஷ்ணன் மற்றும் சார்ஜ் பால் நிறுவனத்தின் இணை நிறுவனர் புருனோ லாம்ப்ளா, மத்திய பல்கலை கழகத்தின் பதிவாளர் இரா. திருமுருகன் மற்றும் சார்ஜ் பால் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பரமேஷ் குணசேக ரன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றத்தில் கையெழுத்திட்டனர். ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்ட சார்ஜ் பால் நிறுவனம், மின்சார வாக னங்களுக்கு பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் தொழில் நுட்பத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு தயாரிக்கும் நிறுவனம் ஆகும். பயிற்சி, ஆராய்ச்சி, ஆலோசனை, பணியாளர் மென்பொருள் ஆதரவு, தரவு பொறியியல் தீர்வுகள் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பல்வேறு களங்களில் ஒத்துழைப்பை வளர்க்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் சார்ஜ் பால் நிறுவனமும் இணைந்து, குறுகிய மற்றும் நீண்ட கால கால பயிற்சிகளை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கும். அதுமட்டுமின்றி இரு நிறுவனங்களிலும் ஆர்வமுள்ள துறைகளில் ஆராய்ச்சி முயற்சிகள் ஊக்குவிக்கப்படும்.