districts

img

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்

புதுக்கோட்டை, மே 29-  

     புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  

   நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.பா.புவனேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ. வேல்முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) மோ.மணிகண்டன், உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சு.இராமர், வட்டாட்சியர் விஜய லெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.