districts

img

அய்யம்பேட்டையில் பாலம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு

அய்யம்பட்டை, மே 17-

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் புதிய  பாலம் கட்டும் பணியின்  போது சாலை சரிந்து விழுந்த தால் அய்யம்பேட்டை-கண பதி அக்ரஹாரம் இடையே  போக்குவரத்துத் துண்டிக் கப்பட்டது. ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை-கணபதி அக்ரஹாரம் சாலையில் குட முருட்டி ஆற்றின் குறுக்கே சுமார் 80 ஆண்டுகள் பழமை யான பாலம் உள்ளது. இந்தப் பாலத்தை மாகாளிபுரம், கணபதி அக்ரஹாரம், வீர மாங்குடி, ஈச்சங்குடி, மண லூர், பட்டுக்குடி, இலுப்பக்  கோரை, உள்ளிக்கடை, பெருமாள் கோவில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர்.

   இந்தப் பாலத்தின் வழியே தஞ்சாவூரிலிருந்து  இளங்கார்குடி, இலுப்பக் கோரை ஆகிய கிராமங்க ளுக்கு இரண்டு அரசுப் பேருந்துகளும், மூன்று மினி  பேருந்துகளும் சென்று வந்  தன. திருவையாறு-கும்ப கோணம் சாலையில் உள்ள ஊர்களுக்கு செல்லும் அவ சரகால ஆம்புலன்ஸ் வாக னங்களும், இந்தச் சாலை வழியே தான் சென்று வந் தன.  

   தஞ்சாவூர், கும்ப கோணம், பாபநாசம், அய்  யம்பேட்டை ஆகிய ஊர் களில் இருந்து பள்ளி, கல்  லூரி வாகனங்கள் தினம்  தோறும் இந்தப் பாலத்தின்  வழியே சென்று தான் மாணவ -மாணவிகளை பள்ளி, கல்லூரிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.

   வட  பகுதி கிராமங்களைச் சேர்ந்த  விவசாயிகள், தொழிலாளர் கள் இந்தப் பாலத்தின் வழியே தங்கள் விளை  பொருட்களை நகரங்க ளுக்கு கொண்டு சென்று வரு கின்றனர். பழமையான இந்தப் பாலம் பழுதடைந்ததால் அதன் அருகிலேயே புதிய  பாலம் கட்டப்பட்டு வரு கிறது. பழைய பாலமும், புதிய பாலமும் இணையும் வடபுறத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் அந்த வழியில் கன ரக வாக னங்கள் செல்ல தடை விதிக்  கப்பட்டது.

    இரண்டு சக்கர வாக னங்கள் மட்டுமே சென்று வந்  தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழைய பாலத்தின் வடபுறச் சாலை சரிந்து விழுந்தது. இதனால் அய்யம்பேட்டை- கணபதி அக்ரஹாரம் சாலை யில் போக்குவரத்து துண் டிக்கப்பட்டது. இந்தச் சாலை யைப் பயன்படுத்தும் கிராம  மக்கள் அவசர தேவை களுக்கு இரண்டு சக்கர வாக னங்களில் கூட அய்யம்பேட் டைக்கு வர முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. வாகனங்க ளில் வரும் வடக்கு பகுதி கிராம மக்கள் சுமார் 30 கி.மீ. சுற்றி பாபநாசம் அல்லது திருவையாறு சென்று தான் அய்யம்பேட்டைக்கு வர வேண்டியுள்ளது. எனவே குடமுருட்டி ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத் துத் தர  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.