districts

img

மார்க்கெட் வாடகை நிர்ணயத்தில் குளறுபடி: வணிகர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.28 - தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலில், ஏற்கனவே இருந்த மார்க்கெட்டை விட்டு விட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்  308 கடைகளுடன் சரபோஜி மார்க்கெட்டை மாநக ராட்சி நிர்வாகம் புதிதாக அமைத்தது.   இந்த கடைகளுக்கு கடந்த 2022 செப்டம் பர் மாதம், டெண்டர் முறையில், வியாபாரி கள் அதிக வாடகைக்கு கடைகளை எடுத்த னர். ஆனால், அந்த அளவுக்கு வருவாய் இல்லாததால், கடைகளை நடத்த முடியாத நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர். இருப்பினும் டெண்டரில் கடையை வாட கைக்கு எடுத்த சில மாதங்களிலேயே, நூற்றுக் கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வேண்டாம்  என முறைப்படி திரும்ப ஒப்படைத்து விட்ட னர். ஆனால், வியாபாரிகள் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பத் தரமுடி யாது என மாநகராட்சி நிர்வாகம் கூறி விட்டது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு டெண்டர் நடத்தி, குறைந்த வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, கடைகள் வாடகைக்கு விடப்பட்டன. இதையடுத்து வாடகை வித்தியாசத்தை சரிசெய்யக் கோரி  கமிஷனரிடம் வியாபாரிகள் முறையிட்டனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், கூடுதல் வாடகைக்கு ஏலத்தில் எடுத்த வியாபாரிகள் மாத வாடகை  செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ள னர். இந்நிலையில், வாடகை தொகை நிலுவை வைத்த கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கடைகளைப் பூட்டி சீல் வைக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டனர்.  இதன் காரணமாக அதிருப்தியடைந்த வியாபாரிகள் உட்பட அனைத்து வியாபாரி களுக்கும் ஒரே மாதிரியான குறைந்த வாட கையை நிர்ணயிக்க வேண்டும் என வலி யுறுத்தி புதன்கிழமை கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள்  கூறுகையில், முன்னாள் ஆணையர் இருந்த  போது, கூடுதல் வாடகை நிர்ணயம் செய்து  கடைகளை ஒதுக்கியதால், மூன்று மாதத்தில்  நூறு பேருக்கு, மேல் கடை வேண்டாம் என  திருப்பி ஒப்படைத்து விட்டனர். அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு தெளிவுரை அனுப்பி யுள்ளோம். அதற்கான பதில் இன்னும் வர வில்லை. சில நிபந்தனைகளுடன் டெபாசிட் பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்ற னர்