districts

img

தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா ஆர்வலர்களை படப்பிடிப்பு குழுவினர் விரட்டுவதாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை, மார்ச்.10-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல் கின்றனர்.  மிக பழமையான நினைவு சின்னங்கள் நிறைந்துள்ள தரங்கம்பாடியில் டென்மார்க்-தரங்கம்பாடி இடையேயான பல நூற்றாண்டு கால நல்லுறவின் அடையாளமாய் திகழும் வானு யர்ந்த டேனிஷ்கோட்டை, தேவாலயங்கள் மற்றும் டேனிஷ் கலைநுணுக்கம் நிறைந்த கட்டிடங்கள், கல்லறைகள் என வரலாற்றை சுமந்து நிற்கிறது. பாதுகாக்கப்பட்ட தரங்கம்பாடி யில் கடந்த பல ஆண்டுகளாக  திரைப்பட படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் படப்படிப்பு என்ற பெயரில் நினைவு சின்னங்க ளின் பெருமையை சிதைக்கும் வகையில் படப்பிடிப்புகள் அவ்வப்போது நடந்து வரு கிறது.  இதனிடையே கடந்த 4  நாட்களாக டேனிஷ்கோட்டை எதிர்ப்புறம் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் திரைப் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது. இதனால், படக் குழுவினர் நடைபயிற்சி சாலை யை ஆக்கிரமித்துள்ளனர். பாதுகாப்பு என்ற பெயரில் கருப்பு உடையணிந்து நிற்கும் அடி யாட்கள் அவ்வழியாக கடற்கரை க்கு செல்லும் சுற்றுலா ஆர்வலர்களை விரட்டியடிப்ப தோடு, அவர்களின் செல்போன் களை பிடுங்கி போட்டோ எடுத்தீங்களா? என மிரட்டி வருகின்றனர்.  தரங்கம்பாடி கடற்பகுதி யில் வீசும்  காற்றில் ஓசோன் வாயு கலந்துள்ளதால் அக்காற்றை சுவாசிக்க வருபவர்கள் விரட்டி யடிக்கப்படுகின்றனர். முறையான அனு மதியின்றி உலகப்புகழ்பெற்ற தரங்கம்பாடியை ஆக்கிர மித்துக்கொண்டு பாதுக்கப்பட்ட சுற்றுலா தலமான தரங்கம்பாடி யின் நினைவு சின்னங்களின் பெருமைகளை சீர்குலைக்கும் படப்பிடிப்பு குழுவினர் மீது  பேரூராட்சி நிர்வாகம், தொல்லி யல்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.