மயிலாடுதுறை, மார்ச் 9 - மயிலாடுதுறை மாவட்டம், திருக்க டையூரில் உள்ள அரசுக்குச் சொந்த மான ஆணைக்குளத்தை தூர்வாரி, சீரமைத்து படகு குழாம் அமைத்துத் தர வேண்டுமென தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருக்கடையூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற அபிராமி அம்மன் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை யிலும் முறையாக கோவில் நிர்வாகம் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. இந்நிலையில் புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலமான திருக்கடையூர் மற்றும் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவிலான ஆணைக்குளத்தை தூர்வாரி, சீரமைக்க வேண்டும். குளத்தைச் சுற்றிலும் படிக்கட்டுகளை அமைத்து அழகு படுத்தி படகு குழாம் அமைக்க வேண்டு மென கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து கடந்த ஓரிரு ஆண்டு களுக்கு முன்பு ரூ.1.45 கோடி நிதியை நபார்டு வங்கி மூலம் ஒதுக்கீடு செய்த நிலை யில், பணியை மேற்கொள்ள தடையாக இருந்து திருக்கடையூர் கோவில் நிர்வாகம் அந்த நிதியினை திருப்பி அனுப்ப வைத்தது. நாளுக்கு நாள் திருக்கடையூர் வருபவர் களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும் நிலையில் பக்தர்களுக்கும், சுற்றுலா வருபவர்களுக்கும் பொழுதுபோக்கு இடமாக மாற்றும் விதமாக அரசுக்கு சொந்த மான ஆணைக்குளத்தை தூர்வாரி, படகு குழாம் அமைத்து தர வேண்டுமென தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருக்கடையூர் பகுதியின் நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், பக்தர்கள், சுற்றுலா விரும்பி களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தை ஏற்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மயிலாடுதுறையின் புதிய மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுப்பாரா?