தஞ்சாவூர், ஏப்.19-
பொதுமக்களின் குறை களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழ்நாட் டில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் செயல்பட்டு வரு கிறது. மக்கள் நேர்காணல் முகா மானது ஒவ்வொரு மாதமும் 2 ஆவது வாரத்தில் நடைபெற்று வருகிறது.
இதன்படி, தஞ்சாவூர் வட்டம், ராமாபுரம் சரசம், திரு வேதிக்குடி கிராமத்தில் வெள்ளிக் கிழமை அன்று மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, முகாமில் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக் கொள்ள லாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.