தஞ்சாவூர், ஜூன் 26 -
தஞ்சாவூர் கோட்ட அளவில், 2022-23 ஆம் கல்வி யாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்கல்வி யில் சேராத மாணவர்களை உயர்கல்வியில் சேர்வதற்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப் படி” என்ற சிறப்பு முகாம், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி யளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தஞ்சாவூர் டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நடை பெற உள்ளது.
இம்முகாமில் வருவாய் கோட்ட அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டு துறை, முன்னோடி வங்கி மேலாளர்கள், மகளிர் திட்ட துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர், அரசு கலைக்கல்லூரி, பல்நுட்பக் கல்லூரி, தொழில் பயிற்சி நிறுவன முதல்வர்கள் போன்ற துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ள னர்.
மேலும், உயர்கல்வியில் சேர்வதற்குரிய வழிகாட்டு தல்கள், உயர்கல்வி நிறுவனங்களில் உடனடி சேர்க்கை, கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள் (சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் தலைமுறை பட்ட தாரிச் சான்று) போன்றவை உடனடியாக கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு மற்றும் ஒரத்த நாடு தாலுகாவைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் பெற்றோருடன் செவ்வா யன்று நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.
புதுக்கோட்டை
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண வர்களுக்கு ‘உயர்வுக்குப் படி’ என்ற திட்டத்தில் உயர் கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாமினை, புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
2022-23 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை, கந்தர்வக் கோட்டை, திருமயம், ஆலங்குடி, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாண வர்கள் உயர்கல்வி பெறும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் சுமார் 510 மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.