districts

img

கட்டணமில்லா பயணம் செய்ய மேலும் ஒரு பேருந்து இயக்கம் நாகைமாலி துவக்கி வைத்தார்

நாகப்பட்டினம், மே 19-

   நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை  தொடங்கி திருவாரூர் வரை மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்து  பயணத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கொடிய சைத்து  தொடங்கி வைத்தார்.  கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட திருக்குவளையிலிருந்து திருவாரூருக்கு தினமும் காலை மற்றும் மாலை ஆகிய  இரு வேளைகளில் பெண்கள் கட்டணமில்லா  பயணம் மேற்கொள்ளும் வகையில் ஒரு நகர பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வரு கிறது.

   இந்நிலையில் தற்போது கூடுதலாக மேலவாழக்கரை ஊராட்சியில் இருந்து திருக்குவளை வழியாக நகரப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டு வந்தது.  இதனடிப்படையில் திருக்குவளை யிலிருந்து கொளப்பாடு, வலிவலம், சாட்டியக் குடி, மாவூர் வழியாக திருவாரூர் வரை புதிய  நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

   பேருந்து சேவையை, கீழ்வேளூர் சட்டமன்ற  உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்ட ஆட்சியர் மரு.அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன் ஆகி யோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.  

  நிகழ்வில், திருக்குவளை ஊராட்சி தலைவர் இல.பழனியப்பன், திருக்குவளை வட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்திமா ஆரோக்கியமேரி, சு.வெற்றிச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.