districts

img

தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு சிபிஎம் தலைவர்கள் மரியாதை

மயிலாடுதுறை, பிப்.24-  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லை யாடியில் உள்ள தியாகி.தில்லையாடி வள்ளியம்மையின் சிலைக்கு மார்க்சி ஸ்ட் கட்சி தலைவர்கள் மாலை அணி வித்து மரியாதை செய்தனர்.  தியாகி வள்ளியம்மையின் 108 ஆவது நினைவு தினம் செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள நினைவு மண்டபத்திலுள்ள வள்ளி யம்மையின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.பி.மார்க்ஸ், அமுல்காஸ்ட்ரோ, அம்மையப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஐயப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  அரசு விழாவாக கொண்டாடுக தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேய நிறவெறிக்கு எதிராகவும், திருமணச் சட்டத்திற்கு எதிராகவும் பல்வேறு போ ராட்டங்களை முன்னின்று நடத்திய  தமிழர்களில் ஒருவரும், காந்தியடி களின் தலைமையிலான போராட்டங்க ளில் கலந்துகொண்டு சிறை சென்று அடக்குமுறைகளுக்கு ஆளாகி இளம் வயதிலேயே உயிர்நீத்து காந்தியடிக ளுக்கு தியாக உணர்வையூட்டிய தியாகி வள்ளியம்மையின் நினைவுதினத்தை அரசு விழாவாக முறையாக கொண்டா டுவதோடு, பழுதடைந்துள்ள அவரின் நினைவிடத்தை சீரமைத்து நவீனப் படுத்தி அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.