திருச்சிராப்பள்ளி, டிச.9 - தமிழ்நாடு அணிக்கான வீரர், வீராங்கனை களை தேர்வு செய்வதற்கு மாநில அளவில் தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளன. டிசம்பர் 14 ஆம் தேதி கூடைபந்து (ஆண்கள், பெண்கள்), டிச.13 அன்று கால்பந்து (பெண்கள்) ஆகிய போட்டிகள் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்ட ரங்கத்திலும், வளைகோல் (ஆண்கள்) போட்டி திருச்சி அறிஞர் அண்ணா விளையாட் டரங்கத்திலும், கோ-கோ (பெண்கள்) போட்டி சிவகங்கை மாவட்ட விளையாட்ட ரங்கத்திலும், கையுந்து பந்து (ஆண்கள், பெண்கள்) போட்டி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கத்திலும் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ள 1.1.2004 அன்றோ அல்லது அதற்கு பிறகு பிறந்தவர் களாக இருத்தல் வேண்டும். ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ். போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி ராப்பள்ளி என்ற முகவரியிலும், தொலை பேசி எண்.0431-2420685, 7401703494 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.