districts

img

திருமண மண்டபத்தை சீரமைக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 8-

   திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராம மக்களும் பயன்படுத்தி வரும் சிறுக மணி பேரூராட்சி திருமண மண்டபத்தை சீரமைக்கக்  கோரி இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் சார்பில் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்  றியச் செயலாளர் அஜித்  குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேது பதி, ஒன்றியக் குழு உறுப்பி னர் பாரதி, புலிவலம் கிளைச் செயலாளர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில், சிறுக மணி பேரூராட்சி நிர்வாகம் பெறப்படும் கட்டணத்திற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். திரு மண மண்டபத்தில் உடைந் துள்ள நாற்காலிகளுக்கு பதி லாக புதிய நாற்காலிகள் வாங்க வேண்டும். குளியல் மற்றும் கழிப்பறைகளை சீர மைக்க வேண்டும். மண்ட பத்திற்கு வர்ணம் பூசி புதுப்  பிக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது.