districts

img

கவிஞர் தங்கம்மூர்த்திக்கு ‘தமிழ்க் கவிதைப் பேரொளி’ பட்டம்

புதுக்கோட்டை, மே28 -  

    அந்தமானில் நடைபெற்ற உலகத் ஹைக்கூ மாநாட்டில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் தங்கம் மூர்த்திக்கு ‘தமிழ்க்கவிதைப் பேரொளி’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

    தூண்டில் ஹைக்கூ கவிதை இதழ், இனிய நந்தவனம் மாத இதழ், அந்தமான் தமிழர்  சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதை இயக்கம்  ஆகியவை இணைந்து தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாட்டை அந்தமா னில் நடத்தின.

    இந்த மாநாட்டில் பால சாகித்திய புரஸ்கர்  விருதுபெற்ற மு.முகேஷ், அந்தமான்  தமிழர்  சங்கத் தலைவர் எல்.மூர்த்தி, சாகித்திய அகா தெமியின் மேனாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி, இனிய நந்தவனம் இதழ் ஆசிரியர் சந்திரசேகரன், கவிஞர் பா.தென்றல் உள்ளிட்டோர்  பல்வேறு  தலைப்புகளில் பேசினர்.  

    இந்த மாநாட்டில் புதுக்கோட்டை கவிஞர்  தங்கம்மூர்த்திக்கு ‘தமிழ்க்கவிதைப் பேரொளி’  என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. விருதை அந்தமான் தமிழர் சங்கத் தலைவர்  எல்.மூர்த்தி வழங்கினார்.