districts

60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப மின் ஊழியர்கள் வலியுறுத்தல்

கரூர், ஜூன் 18-

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கரூர் மண்டலக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கரூர் மாவட்டத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்டடச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு வரவேற்றார். கரூர்  மண்டலச் செயலாளர் க.தனபால் வேலை அறிக்கையை சமர்ப்பித் தார். மாநிலத் துணைத் தலைவர்கள் பி.ஸ்ரீதேவி, ஜி.கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். குளித்தலை கோட்டச் செயலாளர் பி.நெடுமாறன் நன்றி கூறினார்.

    மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊழி யர்களுக்கு தனி கழிவறை மற்றும் ஓய்வு அறைகள் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு ஊர் மாற்றம் வழங்க வேண்டும், விபத் தில்லா மின்வாரியம் அமைக்க, மின் ஊழியர் உயிர்ப் பலியை தடுக்க 60 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5,000 கேங்மேன் பணியாளர்களுக்கு பணி  ஆணை வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.