புதுக்கோட்டை, மே 6-
புதுக்கோட்டை பூங்கா நகரைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் குமார் (49). இவர் பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டியராஜிடம் கடந்த 2013 முதல் தொடர்ச்சியாக பல நிலங்களை வாங்கித் தருவதாகவும், குடும்பத்தின் அவசர செலவுக்கு என்றும் மொத்தம் ரூ.1.89 கோடி வரை பணம் பெற்றுள்ளார்.
குறிப்பாக, சிப்காட் அருகே ஏற்கெனவே நீதிமன்ற வழக்கில் உள்ள நிலம் ஒன்றை அந்த வழக்கை மறைத்து ரூ.40 லட்சத்துக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள் ளார். மேலும், புதுக்கோட்டை நகரில் ரூ.1 கோடிக்கு ஓர் இடத்தை வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் பெற்றுள் ளார். ஆனால், அந்த இடத்தில் வேறொருவர் வீடு கட்டி யுள்ளார்.
இதுபோல பல முறை நிலம் வாங்கித் தருவதாகவும், குடும்பத்தின் அவசரத் தேவைக்காகவும் மொத்தம் ரூ.1.89 கோடி வரை ஆன்லைன் பரிமாற்றம், ரொக்கம் மற்றும் காசோலை மூலம் குமார் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பாண்டிராஜ், புதுக்கோட்டை மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துறையில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் பணம் கொடுத்த ஆவ ணங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மோசடி செய்த குமாரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.