தஞ்சாவூர், ஜூன்.6 -
பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த கோடைஉழவு அவசியம் என சேதுபாவா சத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் கடைமடைப் பகுதியில் கோடை உழவிற்கு இது ஏற்ற தருணம். அறுவடை செய்து தரிசாகக் கிடக்கும் நிலங்களை விவ சாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற லாம். முதலில் வயலை இரும்பு கலப்பை கொண்டு அல்லது டிராக்டர் கொண்டோ குறுக்கும் நெடுக்கமாக ஆழமாக புழுதி உழவு செய்ய வேண்டும்.
கோடை உழவு மேற்கொள்வதால் புல், பூண்டுகள் வேர் அறுந்து கருகி விடுகிறது. மண் பொளபொளப்பு தன்மை அடைகிறது. பயிர், பருவ காலங்களில் சிலவகைப் பூச்சி களின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டுப் புழுக்களாக மாறி வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வ தன் மூலம் இந்தப் புழுக்கள் மேற்பரப் பிற்கு கொண்டுவரப்பட்டு அவை பறவை களால் பிடித்துச் சென்று அழிக்கப்படு கிறது. இ
தன் மூலம் அடுத்த பயிர் சாகுபடியின் போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாகக் குறையும். களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. மண்ணில் நீர்பிடிப்புத் தன்மையை பெருக்குகிறது.
நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயா ரிப்பு மிகவும் எளிதாகிறது. உரம் சமச்சீராக கிடைத்து வளர்ச்சி தூண்டப்படுவதுடன், பயிர் செழித்து வளர்கிறது. இதனால் மக சூல் கூடுதலாகக் கிடைக்கிறது.
மணல் சாரி, களர் மற்றும் உவர் நிலங்க ளில் கோடை உழவைத் தவிர்க்க வேண்டும். கோடை உழவால் மணல் சாரி நிலங்களில் ஈரத்தன்மை குறைகிறது. களர் மற்றும் உவர் நிலங்களில் நீர் ஆவியாகி விடுவதால் உப்புத்தன்மை ஏற்படும் அபாயம் ஏற்படும். எதிர்வரும் கோடைகாலத்தில் பெய்யக் கூடிய மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்வது நல்ல மகசூலை கொடுக் கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.