districts

img

அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வலியுறுத்தி மின் ஊழியர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 17- நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங்  விடுவதைக் கைவிட வேண் டும். ரிடெவலப்மெண்ட் முறைக்குச் செல்லக்கூடாது, இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்  டும். மின்வாரிய பணியா ளர்களுக்கு வழங்க வேண்  டிய ஊதிய உயர்வு உள் ளிட்ட பணப்பயன்களை நிலு வைத் தொகையுடன் வழங்க வேண்டும், மின்வாரியப் பணியாளர்களுக்கு  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவ டிக்கை குழு சார்பில் திருச்சி ராப்பள்ளி தென்னூர் மின்  வாரியத் தலைமைப் பொறி யாளர் அலுவலகம் முன்   பிரச்சாரக் கூட்டம் நடைபெற் றது. சிஐடியு மாநகர் மாவட்  டச் செயலாளர் ரெங்கராஜன்  தலைமை வகித்தார். பொறி யாளர் சங்க மாவட்டத் தலை வர் நரசிம்மன், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் சிவசெல்வம், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஸ்ரீகுமார், ஐக்கிய சங்கம் சார்பில் ஆலயமணி, தமிழ்  நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பு வட்டச் செயலா ளர் எஸ்.கே.செல்வராஜ் ஆகியோர் கோட்டை நோக்கி நடைபெறும் பேரணி யின் நோக்கத்தை வலி யுறுத்திப் பேசினர்.