districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருவாரூர் - காரைக்குடி ரயில்பாதை மின்மயமாக்கல் பணிக்கு ரூ.72 கோடியில் ஒப்பந்தப் புள்ளி

தஞ்சாவூர், நவ.14- திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக் குடி ரயில் பாதை மின்மயமாக்கலுக்கு 72 கோடி ரூபாய் செலவில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட திருவாரூர் - பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயில் பாதை 149 கிலோமீட்டர் தூரம் கொண் டது. இந்த ரயில் பாதையை மின்மய மாக்க ரயில்வே துறை 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்  புள்ளி கோரப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில், மேட்டுப்பா ளையம், ஊட்டி ரயில் பாதை தவிர அனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதை களும், அகல ரயில் பாதையாக மாற்றப் பட்டு விட்டது. அதேபோல் அனைத்து  ரயில் பாதைகளையும் மின்மயமாக்கும்  திட்டத்தின்கீழ், மின்மயமாக்கல் பணிக்கு ரயில்வே வாரியம்  ஒப்புதல்  அளித்து பணிகளை செய்து வருகிறது. செங்கோட்டை - புனலூர் ரயில் பாதை பணி மற்றும் மதுரை - தேனி - போடி மின்மயமாக்கல் பணிகள் துரிதப் படுத்தப்பட்டு வேகமாக நடைபெறு கின்றன. சமீபத்தில் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளி (37 கி.மீ) ரயில் பாதை மின்மயமாக்கல் பணிக்கு சுமார் ரூ.23 கோடி செலவில் ஒப்பந்தம் கோரப்பட்டது.  தற்போது திருவாரூர் - திருத்துறைப் பூண்டி - பட்டுக்கோட்டை - பேராவூரணி -  அறந்தாங்கி - காரைக்குடி ரயில் பாதை  (148 கி.மீ) மின்மயமாக்கல் பணிக்கு சுமார் ரூ.72 கோடி செலவில் டெண்டர்  விடப்பட்டுள்ளது. இப்பணிகள் 2024  அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்ப டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதை மின்மயமாக்கல் முடிந்தால், தென்னக ரயில்வேயில் மின்மயமாக்கல் பணிகள்  நூறு சத வீத முடிந்துவிடும். இப்பணி முடிந்த பிறகு, பயணிகள் ரயில் மற்றும் சரக்கு  ரயில்கள் மின்சார ரயில் என்ஜின்கள் மூலம் இயக்கப்படும். இதனால் டீசல் பயன்பாடு குறையும். ரயில்வேக்கு எரி பொருள் செலவு மிச்சமாகும். காற்று மாசு குறைக்கப்பட்டு சுற்றுப்புறச் சூழல்  பாதுகாக்கப்படும். திருவாரூர் சந்திப்பில் டீசல் ரயில் என்ஜின், மின்சார ரயில் என்ஜின் மாற்றம் தேவையிருக்காது. இதனால் பயண நேரம் தாமதம் ஆகாது. மின்மய மாக்கல் முடிந்த பிறகு அதிகளவில் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள்,  சரக்கு ரயில்கள் இயக்கப்படும். திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக் குடி ரயில் பாதையை மின்மயமாக்க நிதி ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தப் புள்ளி அறிவித்து பணிகளை துவக்கியதற்கு ரயில் பயணிகள், வர்த்தகர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஒன்றிய ரயில்வே  அமைச்சர், ரயில்வே வாரிய தலைவர்,  தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர்  ஆகியோருக்கு நன்றி தெரிவித் துள்ளனர்.

நவ.18-இல் குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், நவ.14 -  2023 நவம்பர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நவ.18 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொது விநியோகத் திட்டம்  தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின், பொதுமக்கள் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில், வட்ட  வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறு மாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.        

நவ.22-இல் மக்கள் நேர்காணல் முகாம் 

தஞ்சாவூர், நவ.14 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம், ஆவணம்  சரகம், செங்கமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நவ.22 (புதன்கிழமை) மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை  தொடர்பாக மனு அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வருவாய்த்துறை அலுவலர் மாநாடு

பாபநாசம், நவ.14 - தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பாப நாசம் வட்டக் கிளை மாநாடு நடந்தது. கிளைத் தலைவர்  வரதராஜன் தலைமை வகித்தார். வட்டச் செயலர் வினோ தினி வரவேற்றார். வட்டப் பொருளாளர் செல்வராணி துவக்கவுரையாற்றினார். பாபநாசம் வட்டாட்சியர் மணி கண்டன், வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பார்த்த சாரதி உரையாற்றினர். இதில் மேம்படுத்தப்பட்ட ஊதியம்,  பழைய ஓய்வூதிய திட்டம், கும்பகோணத்தை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உள்ளிட்ட 15 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக் கிளை துணைத் தலைவர் சுந்தரேஸ்வரன் நன்றி கூறினார்.

நிவாரண உதவி வழங்கல்

பாபநாசம், நவ.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோ யில், சவேரியார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் அடைக் கலம். இவரது கூரை வீடு மின் கசிவால் தீப்பற்றி சேதமா னது. இதுகுறித்து தகவலறிந்த இந்தியன் ரெட் கிராஸ்  சொசைட்டி பாபநாசம் கிளை உறுப்பினர்கள், பாதிக்கப் பட்ட அடைக்கலம் குடும்பத்திற்கு தார்பாய், பாத்திரம், வேட்டி, புடவை, சட்டை, கைலி, பணம் உள்ளிட்ட நிவாரண  உதவிகளை வழங்கினர். இதில் இந்தியன் ரெட் கிராஸ்  சொசைட்டி பாபநாசம் கிளை சேர்மன் சரவணன், செயலர்  விவேகானந்தம், ஆயுட்கால உறுப்பினர்கள் உடனிருந்தனர்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேதியில் மாற்றம்

புதுக்கோட்டை, நவ.14 - புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.1.2024 ஆம் தேதி யினை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்  சிறப்பு சுருக்கமுறை திருத்தல் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் 4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக் கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.  தீபாவளி பண்டிகைக்காக 13.11.2023 (திங்கள்) அன்று தமிழக அரசால் பொது விடுமுறை அளிக்கப்பட்டதால், அதை ஈடுசெய்யும் பொருட்டு 18.11.2023 அன்று வேலை  நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நவம்பர் 18,  19 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த சிறப்பு முகாம் கள் 25.11.2023 (சனிக்கிழமை), 26.11.2023 (ஞாயிறு) ஆகிய  தினங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இம்முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும்  வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்  6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் மற்றும் இடமாற்றம்  செய்ய படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து, அதற்குரிய  சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.  தேவையான படிவங்களை அந்தந்த பகுதிகளி லுள்ள வாக்குச்சாவடி மையங்களிலும், வருவாய் கோட் டாட்சியர் அலுவலகங்களிலும், வருவாய் வட்டாட்சி யர் அலுவலகங்களிலும், மற்றும் நகராட்சி அலுவலகங் களிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்திய தேர்தல்  ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைப்பேசி செய லிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு  கண் பரிசோதனை

பாபநாசம், நவ.14 - தமிழக முதல்வரின் கண்ணொளி காப்போம்  திட்டத்தின்கீழ், தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் வித்யா பாடசாலை, திருப்பாலைத் துறை  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கண் பார்வை பரிசோ தனை நடந்தது. கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ  உதவியாளர் ரெங்கராஜ், 210 மாணவ-மாணவி களுக்கு பரிசோதனை மேற்கொண்டார். இதில்  8 மாணவர்களுக்கு விலையில்லா கண்ணாடி வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

திருச்சியில் காற்று மாசு அதிகரிப்பு

திருச்சிராப்பள்ளி, நவ.14- தீபாவளிப் பண்டிகையையொட்டி திருச்சியில் காற்று மாசு 117 ஏகியூஐ (காற்று தரக் குறியீடு) வரை இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.  போக்குவரத்து வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, கார்பன் உள்ளிட்ட நச்சு  வாயுக்களால் பொதுவாகவே காற்றில் மாசு  அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் கட்டுப் பாட்டு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத னால் ஒசோன் மண்டலத்திலும் பாதிப்பு ஏற் படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆண்டுதோறும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்க ளில் ஏற்படும் புகைகள் காரணமாகவும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படு கிறது. அந்த வகையில்  தீபாவளிப் பண்டி கையையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமை களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இத னால் திருச்சியில், குறைந்தபட்சம் 102 ஏகி யூஐ முதல் அதிகபட்சமாக 117 ஏகியூஐ வரை காற்று மாசு இருந்ததாக சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.  புள்ளி விவரப்படி 50 ஏகியூஐ வரையிருந் தால் நல்லது, 51 முதல் 100 வரை பரவா யில்லை, 101 முதல் 200 வரை மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் (ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்கள் பாதிக்கப்படுவர்), 201  முதல் 300 என்பது அனைத்து தரப்பினருக் கும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும், 300  என்பது முற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.  இதில் திருச்சியில் அதிகளவாக, தென் னூர் பகுதியில் 117 ஏகியூஐ, குறைந்த அள வாக உறையூர் ராமலிங்கநகர் பகுதியில் 102  ஏகியூஐ தரக் குறியீடு என்ற அளவில் மாசு  ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை தகவல்  வெளியிட்டுள்ளது.

காபி நிலையம் அமைக்க ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மானியத்தில் கடனுதவி

புதுக்கோட்டை, நவ.14- ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச்  சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத் துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவிக்கையில், “இத்தொழிலை தொடங்க  காலியிடம் அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர் களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் ரூ.2  லட்சம் முற்றிலும் விலக்கும், விற்பனை செய்ய வாங்கும்  பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.  மேலும், மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டண  விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலுக்கான திட்ட அறிக்கை தயார் செய்ய அந்நிறுவனத்தின் மூலம் இலவச ஆலோசனைகள் வழங்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட் பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற  புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www. tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம்  வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது  அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும், பழங்குடியினருக்கு 50  சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வரை வழங்கப் படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீட்டை வங்கியில் செலுத்தி எஞ்சியத் தொகைக்கு வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன்  அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: ப.மாணிக்கம்தாகூர் எம்.பி கண்டனம்

விருதுநகர், நவ.14- கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை உடைக்கப்பட்டதற்கு விருது நகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் எம்.பி  கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கன்னி யாகுமரி மாவட்டம் அருமநல்லூர் சந்திப்பில் முன்னாள்  பிரதமர் ராஜீவ்காந்தியின் உருவச் சிலை இருந்தது. இச்  சிலையை யாரோ சில மர்ம நபர்கள், உடைத்து சேதப் படுத்தியுள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது.  அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே,  அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிலையை உடைத்து சேதப்படுத்தி யவர்களை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காவலரை தாக்கியவர் தலைமறைவு  கைது செய்ய கேரளம் சென்றது தனிப்படை

குழித்துறை, நவ.14- மார்த்தாண்டம் அருகே வாகன சோதனையில் ஈடு பட்ட சிறப்பு துணை காவல் ஆய்வாளர், தலைமை காவலரை  தாக்கிவிட்டு தலைமறைவானவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் அருகே நட்டாலம் ஸ்டார் சந்திப்பில்   சிறப்பு எஸ்.ஐ மோகன்ராஜ்  மற்றும்  தலைமை காவலர் சகீர்  ஆகியோர்  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொ ழுது நள்ளிரவு 3 மணி அளவில் அப்பகுதி வழியாக  சந்தேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ள னர்.  அப்போது குடிபோதையில் இருந்த நட்டாலத்தைச் சேர்ந்த சுவாமிதாஸ் மகன் அஜித் (24), இதே பகுதியைச்  சேர்ந்த கிறிஸ்துதாஸ் மகன் அனீஸ் (25) ஆகியோர் காவல்  துறையினரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.  இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த அனீஷ் கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் அடித்ததில் காவல்துறையினர்  காயம் அடைந்தனர். அஜித் கைது செய்யப்பட்டார். அனீஸ் தலைமறைவானார். இவர் கேரளா தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை ஒட்டி தனிப்படை அமைக்கப்பட்டு இவரை கைது செய்ய கேரளா சென்றுள்ளனர் .

காட்டுப் பன்றிகள் அட்டகாசம்

திருநெல்வேலி, நவ. 14- களக்காடு அருகே உள்ள மலை அடிவார கிராமமான  அரசுபத்து பகுதியில் ஞாயிறன்று இரவு காட்டுப்பன்றி கள் கூட்டமாக நுழைந்தன. அங்கு காமராஜர்  புரம் ரிவின்சனுக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து  100க்கும் மேற்பட்ட ஏத்தன்ரக வாழை மரக்கன்றுகளை நாசம் செய்தன. பருத்தான்பத்து கிராமத்திலும் வாழை களை காட்டுப்பன்றிகள் சாய்த்தன. இதனால் விவசா யிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

மீனவர்கள் கடலுக்குச்  செல்ல தடை

தூத்துக்குடி, நவ.14- தமிழக கடலோரப் பகுதி களில் சுழல் காற்றானது மணிக்கு 40-45 கி.மீ வேகம்  வரை வீசுவதுடன் இடை யிடையே 55 கி.மீ வேகம் வரை  வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும்  நாட்டுப் படகு மீனவர்கள் நவ.15  வரை  மீன்பிடிக்க கடலுக்கு செல்ல  வேண்டாம் என தூத்துக்குடி மீனவர் நலத்துறை உதவி  இயக்குநர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டணம் உயர்வு

தூத்துக்குடி, நவ. 14 திருச்செந்தூர் கோவிலில் கந்த  சஷ்டி முன்னிட்டு ரூ.100 ஆக இருந்த  விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2,000  ஆக உயர்த்தப்ட்டுள்ளது. சாதாரண நாளில் ரூ.500 ஆகவும், விஷேச நாளில் ரூ.2,000 ஆகவும் இருந்த அபி ஷேக தரிசன கட்டணம் ரூ.3,000 ஆகவும், சிறப்பு தரிசன கட்டணம் ரூ.100லிருந்து ரூ.1000  ஆகவும் திடீரென  செவ்வாயன்று உயர்த்தப்பட்டுள்ளது. தரிசன கட்டண விகிதத்தை உயர்த்தும் திருக்கோவில் நிர்வாகம்  பக்தர்கள் வசதிக்காக கோவில்  கடற்கரை பேருந்து நிலையத்திற்குள்  செல்லும் அரசு பேருந்துகளுக்கும் 5  ரூபாய் நூழைவு கட்டணத்தில் இருந்து  50 ரூபாய் என உயர்த்தி உள்ளது.  இதனால் கடந்த 1 மாதமாக திருச்செந் தூர் கோவில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள்  செல்வதில்லை. வெளியூர்களில் இருந்து வரும்  பக்தர்கள் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு  நடந்து செல்கின்றனர்.  திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்  உடனடியாக பக்தர்கள் வசதிக்காக  அரசு பேருந்துகளை திருச்செந்தூர்  கோவில் கடற்கரை பேருந்து நிலையத் திற்குள் கட்டணம் இல்லாது அனு மதிக்க வேண்டும். திருப்பதி போல  திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில்  இருந்து கோவிலுக்கு செல்ல  கட்டணம் இல்லாமல் வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று  பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.