districts

img

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க தரையில் அமர்ந்திருக்கும் பயணிகள்

திருநெல்வேலி, மே 28-

    நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தின மும் ஆயிரக்கணக்கான பய ணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

    தென்னக ரெயில்வேயில் அதிக வருவாயை ஈட்டி கொடுத்துள்ள ரயில் நிலை யத்தில் முக்கிய ரெயில் நிலையமாக சந்திப்பு ரயில்  நிலையம் உள்ளது. கடந்த  ஓராண்டில் ரூ.100 கோடி வரு வாய் கிடைத்துள்ளது. இந்த  ரயில் நிலையத்தில் பழைய  மற்றும் புதிய கட்டிடங்கள்  உள்ளன. இந்த கட்டிடங்க ளில் முன்பதிவு கவுண்டர் களும், உடனடியாக டிக் கெட் எடுத்துச் செல்வதற் கான கவுண்டர்களும், இது  தவிர தட்கல் முன்பதிவு செய்  வதற்கான கவுண்டர்களும் உள்ளன.இங்கு தட்கல் டிக்கெட் எடுக்க நாள் தோறும் ஏராளமான பயணி கள் காலையிலேயே வந்து காத்திருந்து எடுத்துச் செல்  கின்றனர்.

   அவ்வாறு காத்தி ருந்து எடுத்துச் செல்லும்  பயணிகளுக்கு ரயில்வே  நிர்வாகம் இருக்கைகள் அமைத்து கொடுக்கவில்லை என்றும், இதனால் வயதான வர்கள் தரையில் சிரமப்பட்டு அமர்ந்து இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.  தென் மாவட்டங்களின் இதய பகுதியாக நெல்லை சந்திப்பு விளங்கி வருகிறது. ஆனால் தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்து நிற்கும் பயணிகள் தரையில் அமரும் நிலை இருப்பதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

  கடந்த சில  வாரங்களுக்கு முன்பு தட்  கல் டிக்கெட் எடுக்க வரு வோர் காத்து நிற்கும் நிலை யில் அதற்கு முன்பாகவே சிலர் விண்ணப்ப படிவத்தை  கற்களை வைத்து வரிசை யில் வைத்து விட்டு செல்வ தாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் அதி காரிகள் அதனை சரி செய்த னர். எனவே தரையில் அமர்ந்து தட்கல் டிக்கெட் எடுக்க வருவோருக்கு இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.