மயிலாடுதுறை, டிச.26 - நான்கு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருக்கடையூ ரில் உள்ள சாலை ஒப்பந்த பணி நிறுவன மான வில்ஸ்பன் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் தீவிரமாக எழுச்சியு டன் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதுவரையும் கண்டு கொள்ளாத நிலையில், ஞாயிறன்று நடந்த 6-வது நாள் போராட்டத்தில், ஒப்பாரி வைத்து செயலற்று இறந்தவர் முன்பு அழுவது போன்று நடித்து காண்பித்து மலர் வளை யம், மாலை அணிவித்து கோரிக்கைகளை முழங்கினர். (விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயாலாளர் எஸ்.பரமசிவம் பிணம் போன்று நடித்தார்) போராட்டத்தில் கலந்து கொள்ளும் விவ சாயிகள், தோழர்களின் உணவு தயாரிப்பிற் காக கொத்தங்குடி மார்க்சிஸ்ட் கட்சி கிளை சார்பில் சந்திரபோஸ், ராஜ் ஆகியோர் அரிசி மூட்டை, எலுமிச்சைப்பழம் மற்றும் வாழை பழங்களை வழங்கினர். திருக்கடையூரை சேர்ந்த மணிகண்டன் பிஸ்கட் பாக்கெட்டு களையும் வழங்கினார். போராட்டத்திற்கு ஆதரவாக மாதர் சங்கத்தினர், மாவட்ட செயலாளர் ஜி.வெண்ணிலா, ஒன்றிய செய லாளர் டி.ஆர்.ராணி தலைமையில் கலந்து கொண்டனர்.