பாபநாசம், ஜூன் 30 -
ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து வெளி யேற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து, அராஜ கத்தை அரங்கேற்றி, அரசியல் குழப்பங்களை உருவாக்கு வதற்காகவே பாஜக அரசால் அனுப்பப்பட்டுள்ள முகவ ரான ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. அவரது செயல்பாடு தமிழ்நாட்டு மக்களின் மாநில உணர்வு களோடு விளையாடும் வகையில் அமைந்திருக்கிறது.
அதனொரு அங்கமாகவே, இப்பொழுது தமிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக நீக்கு வதாக ஆர்.என்.ரவி அறிவித்திருக்கிறார். இது அரசியல் சாசனத்தின் விழுமியங்களை காலில் போட்டு மிதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் நேரடி கட்டுப்பாட்டுக்கு கீழ் தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்ற பேராசையோடு அவர் செயல்பட்டு வரு வது, இதன் மூலம் அம்பலமாகி இருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியதாக அறி வித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை சர்வாதி காரத்தின் உச்சமாக உள்ளது. நாட்டில் ஒரே அரசு தான் இருக்க வேண்டும். அது ஒன்றிய அரசு மட்டுமே என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் சிந்தனையின் வெளிப் பாடே இந்த நடவடிக்கை. தமிழ்நாட்டை விட்டு ஆர்.என். ரவியை விரட்டும் வரை முதலமைச்சர் தொடர் போராட் டத்தை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.