தேனி, ஜூன் 29-
தேனி மாவட்டத்தில் 56 வேலைவாய்ப்பு முகாம் களில் 611 நபர்களுக்கு தனி யார் துறைகளில் பணிபுரி வதற்கான பணிநியமன ஆணை கள் வழங்கப்பட்டுள்ளது,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப் பினை உருவாக்கி, அவர் களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகை யில் எண்ணற்ற வேலை வாய்ப்பு சார்ந்த திட்டங் களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் தனியார் துறைகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி மாண வர்களுக்கு வேலைவாய்ப்பு களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றா வது வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. தேனி மாவட் டத்தில் வேலை நாடுநர் களுக்கு 56 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள் ளது. இந்த முகாம்களில் 4.173 நபர்கள் பங்கேற்றனர். அவர்களில் 611 நபர்கள் பணி ஆணைகளை பெற்று பயனடைந்தனர்.
வேலைவாய்ப்பு முகா மில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்ற தேனி வட்டம், கம்பம் யாஸ்மின் தெரிவிக்கையில், நான் பட் டப்படிப்பு முடித்து, தற்போது அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தேன். படிப்பு முடித்தவுடன் வேலை தேடு வதற்கு போக்குவரத்து செல வினங்கள், அஞ்சல் செல வினங்கள், அரசின் போட் டித்தேர்விற்கு எதிர்கொள்ள தேவைப்படும் புத்தகங்கள் வாங்குவதற்கு யாரிடமா வது உதவி கேட்டு பெறு வதற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. நான் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வேலை வேண்டி மனு கொடுத்திருந் தேன்.
இந்நிலையில், முதல மைச்சரின் தமிழக அரசின் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு நல்ல ஊதியத்தில் தேர்வாகி உள்ளேன். இந்த வேலை கிடைத்ததில் மிக வும் மகிழ்ச்சி. என்னைப் போன்ற படித்த வேலை வாய்ப்பற்ற பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற அர சின் எண்ணற்ற திட்டங் களை சிறப்பாக செயல் படுத்தி வருகின்ற முதல மைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி னார்.
இத்தகவலை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எம்.எஸ்.மகாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ள னர்.