districts

கராத்தே பிரீமியர் லீக் போட்டி தூத்துக்குடி மாணவர்கள் சாதனை  

தூத்துக்குசுடி, ஜன.27- தென்மாநில அளவிலான 8வது பிரிமியர் லீக் கராத்தே போட்டி : வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு பாராட்டு சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் சார்பாக மதுரையில் 22முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்ற 8வது பிரிமியர் லீக் கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை புரிந்தனர். தென்தமிழகத் தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் செயல்பட்டார். இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று 6 தங்கப் பதக்கமும் 7 வெள்ளி பதக்கமும் 4 வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர் . வெற்றி பெற்ற மாணவர்களை தலைவர் லயன் டேவிட் காட்டுராஜா ஆகியோர் பாராட்டினர்.