திருவாரூர், ஜன.3 - தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், திரு வாரூர் மாவட்டத்தில் உள்ள சாய்ராம் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவர் ஜி.சாந்தன், இரண்டு வெள்ளி பதக்கங் களை வென்றுள்ளார். டிசம்பர் 28,29 இல் தில்லி யில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் KATA, KUMITE ஆகிய இரு பிரிவுகளில் பங்கேற்ற சாந்தன், 2 வெள் ளிப் பதக்கங்களை வென் றார். இவர், 2024 ஜூன் மாதம் மலேசியாவில் நடைபெறும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங் கேற்க தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவர் ஜி. சாந்தனை, திருவாரூரில் உள்ள தீ டைகர்’எஸ் ஸ்போர்ட்ஸ் மார்டியல் ஆர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் குணசேகரன் மற்றும் சாய்ராம் பள்ளி ஆசிரியர் கள், மாணவர்கள் பாராட்டி னர். மாணவர் ஜி.சாந்தன், சிஐடியு திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளரும், சுமை தூக்கும் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திர னின் மகன் என்பது குறிப் பிடத்தக்கது.