குடவாசல், டிச. 7 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சிமிழி ஊராட்சி தலையாலங்காடு பகுதியில் வசிக்கும் 16 பேர் பல்வேறு கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு குடவாசல் தெற்குப்பகுதி சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி தலைமை வகித்தார். தலையாலங்காடு பகுதியில் வசிக்கும் ஏ.தேவதாஸ் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர் மற்றும் கட்சியின் ஒன்றிய குழு, கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.