districts

img

15 நாட்களாக குடிநீர் இல்லை; பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை, மார்ச் 3-  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில்  அருகே யுள்ள கருவாழக்கரை ஊராட்சி யில் 15 நாட்களாக குடிநீர் கிடைக்கா ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கருவாழக்கரை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மோட்டார் பழுத டைந்ததால், கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலை யோரம் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்கால் முகத்துவார மும் பழுதடைந்துள்ளது.  இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மெயின் ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, மருத்தூர் வடக்கு தெரு, சிவன் கோயில் தெரு, குளத்துமேட்டுதெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மயிலாடுதுறை - பூம்புகார் செல்லும் கருவா ழக்கரை சாலையில் மறியலில் ஈடு பட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தரங் கம்பாடி வட்டாட்சியர் புனிதா,  செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மறிய லில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.